Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2974 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2974திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (தம்முடைய திருவுள்ளம் எம்பெருமானைக்காண வேணுமென்று ஆசைப்பட்டுப் பெறாமையாலே நிர்வேதம் கொண்டு கிடக்கிறபடியை அருளிச் செய்கிறார்.) 1
முடியானே! மூவுலகும் தொழுது ஏத்தும்சீர் அடியானே!
ஆழ்கடலைக் கடைந்தாய்! புள்ளூர் கொடியானே!
கொண்டல்வண்ணா! அண்டத்து உம்பரில் நெடியானே!
என்று கிடக்கும் என் நெஞ்சமே. –3-8-1
என் நெஞ்சம்,En nenjam - எனது மனமானது
முடியானே,Mudiyanae - (உபய விபூதி நாயகத்வ லக்ஷணமான) திருவபிஷேகத்தை யுடையவனே!
மூ உலகும் தொழுது ஏத்தும் சீர் அடியானே,Moo ulagum thozhudhu yaeththum seer adiyanae - மூவுலகத்தவர்களும் வணங்கித் துதிக்கப் பெற்ற சிறப்புள்ள திருவடிகளை யுடையவனே!
ஆழ் கடலை கடைந்தாய்,Aazh kadalai kadaindhaai - (தேவர்களுக்கு அமுதமளிப்பதற்காக) அழமான கடலைக் கடைந்தவனே!
புள் ஊர் கொடியானே,Pul oor kodiyanae - கருடப்பறவையை ஊர்தியாகவும், கொடியாகவுமுடையவனே!
கொண்டல் வண்ணா,Kondal vanna - நீலமேகம் போலும் நிறத்தையுடையவனே!
அண்டத்து உம்பரின் நெடியானே,Andhathu umbarin nediyanae - பரமபதத்திலுள்ள நித்ய ஸூரிகளுக்கு மஹாபருஷனே!
என்று கிடக்கும்,Endru kidakkum - என்று அநுஸந்தித்து உருகிக் கிடக்கின்றது.