| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2974 | திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (தம்முடைய திருவுள்ளம் எம்பெருமானைக்காண வேணுமென்று ஆசைப்பட்டுப் பெறாமையாலே நிர்வேதம் கொண்டு கிடக்கிறபடியை அருளிச் செய்கிறார்.) 1 | முடியானே! மூவுலகும் தொழுது ஏத்தும்சீர் அடியானே! ஆழ்கடலைக் கடைந்தாய்! புள்ளூர் கொடியானே! கொண்டல்வண்ணா! அண்டத்து உம்பரில் நெடியானே! என்று கிடக்கும் என் நெஞ்சமே. –3-8-1 | என் நெஞ்சம்,En nenjam - எனது மனமானது முடியானே,Mudiyanae - (உபய விபூதி நாயகத்வ லக்ஷணமான) திருவபிஷேகத்தை யுடையவனே! மூ உலகும் தொழுது ஏத்தும் சீர் அடியானே,Moo ulagum thozhudhu yaeththum seer adiyanae - மூவுலகத்தவர்களும் வணங்கித் துதிக்கப் பெற்ற சிறப்புள்ள திருவடிகளை யுடையவனே! ஆழ் கடலை கடைந்தாய்,Aazh kadalai kadaindhaai - (தேவர்களுக்கு அமுதமளிப்பதற்காக) அழமான கடலைக் கடைந்தவனே! புள் ஊர் கொடியானே,Pul oor kodiyanae - கருடப்பறவையை ஊர்தியாகவும், கொடியாகவுமுடையவனே! கொண்டல் வண்ணா,Kondal vanna - நீலமேகம் போலும் நிறத்தையுடையவனே! அண்டத்து உம்பரின் நெடியானே,Andhathu umbarin nediyanae - பரமபதத்திலுள்ள நித்ய ஸூரிகளுக்கு மஹாபருஷனே! என்று கிடக்கும்,Endru kidakkum - என்று அநுஸந்தித்து உருகிக் கிடக்கின்றது. |