Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2975 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2975திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (வாக்கானது எம்பெருமானை நோக்கி ‘ஸ்வாமி! நெஞ்சு தேவரீரை நினைக்க அதற்கு அருள் செய்தாப்போலே நானும் தேவரீரை நினைக்க அருள் செய் வேணும்’ என்று அலற்றாநின்றது என்கிறார்.) 2
நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே!
தண் இலங்கைக்கு இறையைச்செற்ற நஞ்சனே!
ஞாலம் கொள்வான் குறளாகிய வஞ்சனே!
என்னும் எப்போதும் என் வாசகமே.–3-8-2
என் வாசகம்,En vaasagam - எனது வாக்கானது
நெஞ்சமே நீள் நகர் ஆக இருந்த என் தஞ்சனே,Nenjamae neel nagar aaga irundha en thanjanae - மனத்தையே பெரிய நகரமாகக் கொண்டு அதிலே தங்கியிருக்கின்ற எனது நற்றுணைவனே!
தண் இலங்கைக்கு இறையை செற்ற நஞ்சனே,Than ilangaiyku iraiai setra nanjanae - தண்ணிதான இலங்காபுரிக்குத் தலைவனாயிருந்த இராவணனைத் தொலைக்கும் விஷயத்தில் நஞ்சானவனே!
ஞானம் கொள்வான் குறள் ஆகிய,Gnanam kolvaan kural aagiya - (மாவலியிடமிருந்து) பூமியைக் கொள்ளும் பொருட்டு வர்மன் மூர்த்தியான
வஞ்சனே,Vanchanae - வஞ்சகனே!
என்னும் எப்போதும்,Ennum eppodhum - என்று எப்போதும் சொல்லா நின்றது