| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2975 | திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (வாக்கானது எம்பெருமானை நோக்கி ‘ஸ்வாமி! நெஞ்சு தேவரீரை நினைக்க அதற்கு அருள் செய்தாப்போலே நானும் தேவரீரை நினைக்க அருள் செய் வேணும்’ என்று அலற்றாநின்றது என்கிறார்.) 2 | நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே! தண் இலங்கைக்கு இறையைச்செற்ற நஞ்சனே! ஞாலம் கொள்வான் குறளாகிய வஞ்சனே! என்னும் எப்போதும் என் வாசகமே.–3-8-2 | என் வாசகம்,En vaasagam - எனது வாக்கானது நெஞ்சமே நீள் நகர் ஆக இருந்த என் தஞ்சனே,Nenjamae neel nagar aaga irundha en thanjanae - மனத்தையே பெரிய நகரமாகக் கொண்டு அதிலே தங்கியிருக்கின்ற எனது நற்றுணைவனே! தண் இலங்கைக்கு இறையை செற்ற நஞ்சனே,Than ilangaiyku iraiai setra nanjanae - தண்ணிதான இலங்காபுரிக்குத் தலைவனாயிருந்த இராவணனைத் தொலைக்கும் விஷயத்தில் நஞ்சானவனே! ஞானம் கொள்வான் குறள் ஆகிய,Gnanam kolvaan kural aagiya - (மாவலியிடமிருந்து) பூமியைக் கொள்ளும் பொருட்டு வர்மன் மூர்த்தியான வஞ்சனே,Vanchanae - வஞ்சகனே! என்னும் எப்போதும்,Ennum eppodhum - என்று எப்போதும் சொல்லா நின்றது |