Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2976 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2976திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (தமது கைளுக்கு வாக்கின் வ்ருத்தியிலும் தம் வ்ருத்தியிலுண்டான சாபலத்தை அருளிச் செய்கிறார்.) 3
வாசகமே ஏத்த அருள் செயும் வானவர் தம் நாயகனே!
நாள் இளந் திங்களைக் கோள்விடுத்து
வேய் அகம் பால் வெண்ணெய் தொடு வுண்ட ஆன் ஆயர் தாயவனே!
என்று தடவும் என் கைகளே.–3-8-3
என் கைகள்,En kaigal - எனது கைகளானவை.
வாசகமே ஏத்த அருள் செய்யும் வானவர் தம் நயாகனே,Vaasagame yaettha arul seyyum vaanavar tham nayaagane - வாக்கு மாத்திரமே துதிக்கும்படியாக அதற்கு அருள் செய்கின்ற தேவாதி தேவனே!
நான் இள திங்களை கோள்விடுத்து,Naan ila thingalai kolviduthu - புதிய இளை உதய சந்திரன் போலப் பற்களின் ஒளியைப் பரவிட்டு
வேய் அகம்பால் வெண்ணெய் தொடு உண்ட,Vey agampaal vennai thodu unda - மூங்கிலால் செய்த வீடுகளில் வெண்ணெயைக் களவு கெய்து அமுது செய்த
ஆன் ஆயர் தாயவனே,Aan aayar thaayavane - கோபால க்ருஷ்ணனே!
என்று தடவும்,Endru tadavum - என்று தடவுகின்றன