| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2976 | திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (தமது கைளுக்கு வாக்கின் வ்ருத்தியிலும் தம் வ்ருத்தியிலுண்டான சாபலத்தை அருளிச் செய்கிறார்.) 3 | வாசகமே ஏத்த அருள் செயும் வானவர் தம் நாயகனே! நாள் இளந் திங்களைக் கோள்விடுத்து வேய் அகம் பால் வெண்ணெய் தொடு வுண்ட ஆன் ஆயர் தாயவனே! என்று தடவும் என் கைகளே.–3-8-3 | என் கைகள்,En kaigal - எனது கைகளானவை. வாசகமே ஏத்த அருள் செய்யும் வானவர் தம் நயாகனே,Vaasagame yaettha arul seyyum vaanavar tham nayaagane - வாக்கு மாத்திரமே துதிக்கும்படியாக அதற்கு அருள் செய்கின்ற தேவாதி தேவனே! நான் இள திங்களை கோள்விடுத்து,Naan ila thingalai kolviduthu - புதிய இளை உதய சந்திரன் போலப் பற்களின் ஒளியைப் பரவிட்டு வேய் அகம்பால் வெண்ணெய் தொடு உண்ட,Vey agampaal vennai thodu unda - மூங்கிலால் செய்த வீடுகளில் வெண்ணெயைக் களவு கெய்து அமுது செய்த ஆன் ஆயர் தாயவனே,Aan aayar thaayavane - கோபால க்ருஷ்ணனே! என்று தடவும்,Endru tadavum - என்று தடவுகின்றன |