Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2977 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2977திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (கண்களானவை ‘கைகளுடைய பரிமாற்றமும் வேணும், தம் வ்ருத்தியான காட்சியும் வேணும்’ என்னாநின்றன வென்கிறார்.) 4
கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை
வைகலும் மாத்திரைப் போதும் ஓர் வீடின்றி
பைகொள் பாம்பு ஏறி உறை பரனே!
உன்னை மெய்கொளக் காண விரும்பும் என் கண்களே.–3-8-4
பைகொள் பாம்பு ஏறி உறை பரனே,Paikol paambu aeri urai parane - படங்கொண்ட திருவனந்தாழ்வான் மீதேறி உறையும் பரமபுருஷனே!
என் கண்கள்,En kangal - எனது கண்களானவை
உன்னை,Unnai - தேவரீரை
கைகளால் ஆர தொழுது தொழுது,Kaigalal aara thozhudhu thozhudhu - கையாரப் பரிபூர்ண நமஸ்காரம் செய்து
மாத்திரை போதும் ஓர் வீடு இன்றி,Maathirai podhum orveedu indri - க்ஷணகாலமும் இடைவிடாமல்
வைகலும்,Vaigalum - நாள்தோறும்
உன்னை மெய் கொள்ள காண்,Unnai mei kolla kaan - உன்னை மெய்யாகவே காண்பதற்கு
விரும்பும்,Virumbum - விரும்புகின்றன.