திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2977 | திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (கண்களானவை ‘கைகளுடைய பரிமாற்றமும் வேணும், தம் வ்ருத்தியான காட்சியும் வேணும்’ என்னாநின்றன வென்கிறார்.) 4 | கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை
வைகலும் மாத்திரைப் போதும் ஓர் வீடின்றி
பைகொள் பாம்பு ஏறி உறை பரனே!
உன்னை மெய்கொளக் காண விரும்பும் என் கண்களே.–3-8-4 | பதவுரை Show / Hideபைகொள் பாம்பு ஏறி உறை பரனே,Paikol paambu aeri urai parane - படங்கொண்ட திருவனந்தாழ்வான் மீதேறி உறையும் பரமபுருஷனே! என் கண்கள்,En kangal - எனது கண்களானவை உன்னை,Unnai - தேவரீரை கைகளால் ஆர தொழுது தொழுது,Kaigalal aara thozhudhu thozhudhu - கையாரப் பரிபூர்ண நமஸ்காரம் செய்து மாத்திரை போதும் ஓர் வீடு இன்றி,Maathirai podhum orveedu indri - க்ஷணகாலமும் இடைவிடாமல் வைகலும்,Vaigalum - நாள்தோறும் உன்னை மெய் கொள்ள காண்,Unnai mei kolla kaan - உன்னை மெய்யாகவே காண்பதற்கு விரும்பும்,Virumbum - விரும்புகின்றன. |