Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2978 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2978திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (காணவும் வேணும், கேட்கவும் வேணுமென்று செவிகள் ஆசைப்படுகின்றன வென்கிறார்.) 5
கண்களாற் காண வருங் கொல் என்று ஆசையால்
மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல்
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்துத
திண் கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே.–3-8-5
என் செவிகள்,En sevigal - எனது காதுகளானவை
கண்களால் காண வரும் கொல் என்று ஆசையால்,Kangalal kaana varum kol endru aasaiyal - கண்களால் காணும்படி வருவனோ வென்று ஆசையினால்
மண் கொண்ட வாமனன் ஏற,Mann konda vaamanan aera - (மாவலியிடம்) பூமியைக் கவர்ந்த வாமனன் (தன் மீது) ஏறுதலால்.
மகிழ்ந்து செல்,Magizhndhu sel - மகிழ்ச்சியோடு செல்கின்ற
புள்ளின்,Pullin - கருத்மானுடைய
பண்கொண்ட,Pankonda - ஸாம்வேத ஸ்வரப்ரசுரமான
சிறகு ஒலி,Siragu oli - சிறகின் தொனியை
பாவித்து,Paavithu - நினைத்து
கிடந்து,Kidandhu - பரவசமாய் கிடந்து
திண்கொள்ள ஓர்க்கும்,Thingolla oarkkum - உறுதியாக நிரூபிக்கின்றன.