| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2978 | திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (காணவும் வேணும், கேட்கவும் வேணுமென்று செவிகள் ஆசைப்படுகின்றன வென்கிறார்.) 5 | கண்களாற் காண வருங் கொல் என்று ஆசையால் மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல் பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்துத திண் கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே.–3-8-5 | என் செவிகள்,En sevigal - எனது காதுகளானவை கண்களால் காண வரும் கொல் என்று ஆசையால்,Kangalal kaana varum kol endru aasaiyal - கண்களால் காணும்படி வருவனோ வென்று ஆசையினால் மண் கொண்ட வாமனன் ஏற,Mann konda vaamanan aera - (மாவலியிடம்) பூமியைக் கவர்ந்த வாமனன் (தன் மீது) ஏறுதலால். மகிழ்ந்து செல்,Magizhndhu sel - மகிழ்ச்சியோடு செல்கின்ற புள்ளின்,Pullin - கருத்மானுடைய பண்கொண்ட,Pankonda - ஸாம்வேத ஸ்வரப்ரசுரமான சிறகு ஒலி,Siragu oli - சிறகின் தொனியை பாவித்து,Paavithu - நினைத்து கிடந்து,Kidandhu - பரவசமாய் கிடந்து திண்கொள்ள ஓர்க்கும்,Thingolla oarkkum - உறுதியாக நிரூபிக்கின்றன. |