Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2979 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2979திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (என்னுடைய ஆவியானது உன்னுடைய கீர்த்தியைக் கேட்க வேணுமென்று விரும்புகிறதென்கிறார்.) 6
செவிகளால் ஆர நின் கீர்த்திக் கனியெனும் கவிகளே
காலப் பண் தேன் உறைப் பத்துற்றுப்
புவியின் மேல் பொன் நெடுஞ் சக்கரத்து உன்னையே
அவிவின்றி ஆதரிக்கும் எனது ஆவியே.–3-8-6
எனது ஆவி,Enadhu aavi - என் பிராணனானது.
நின்,Nin - உன்னுடைய
கீர்த்தி கனி என்னும் கவிகளே,Keerthi kani ennum kavigale - கீர்த்தியாகிய பழம் என்னலாம்படியான கவிகளையே
காலம்,Kaalam - காலத்திற்கு ஏற்ற
பண்,Pan - பண்களாகிற
தேன்,Then - தேனிலே
உறைப்ப,Uraippa - மிகவும் செறிய
துற்று,Thutru - கலந்து
செவிகளால் ஆர,Sevigalal aara - காதுகளால் பூர்ணாமக அநுபவிக்க
புவியின் மேல்,Puviyin mel - பூமியின் மீது
பொன் நெடு சக்கரத்து உன்னையே,Pon nedu sakkarathu unnaiyae - அழகிய பெரிய திருவாழியையுடைய தேவரீரையே
அவிவு இன்றி,Avivu indri - இடையறாமல்
ஆதரிக்கும்,Aadharikkum - விரும்பா நிற்கும்.