| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2979 | திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (என்னுடைய ஆவியானது உன்னுடைய கீர்த்தியைக் கேட்க வேணுமென்று விரும்புகிறதென்கிறார்.) 6 | செவிகளால் ஆர நின் கீர்த்திக் கனியெனும் கவிகளே காலப் பண் தேன் உறைப் பத்துற்றுப் புவியின் மேல் பொன் நெடுஞ் சக்கரத்து உன்னையே அவிவின்றி ஆதரிக்கும் எனது ஆவியே.–3-8-6 | எனது ஆவி,Enadhu aavi - என் பிராணனானது. நின்,Nin - உன்னுடைய கீர்த்தி கனி என்னும் கவிகளே,Keerthi kani ennum kavigale - கீர்த்தியாகிய பழம் என்னலாம்படியான கவிகளையே காலம்,Kaalam - காலத்திற்கு ஏற்ற பண்,Pan - பண்களாகிற தேன்,Then - தேனிலே உறைப்ப,Uraippa - மிகவும் செறிய துற்று,Thutru - கலந்து செவிகளால் ஆர,Sevigalal aara - காதுகளால் பூர்ணாமக அநுபவிக்க புவியின் மேல்,Puviyin mel - பூமியின் மீது பொன் நெடு சக்கரத்து உன்னையே,Pon nedu sakkarathu unnaiyae - அழகிய பெரிய திருவாழியையுடைய தேவரீரையே அவிவு இன்றி,Avivu indri - இடையறாமல் ஆதரிக்கும்,Aadharikkum - விரும்பா நிற்கும். |