திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2980 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2980திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (மஹாபாபியாகையாலே நெஞ்சின் விடாய் தீர்க்கவும் பெற்றிலேனான நான் நெடுநாள் கூப்பிட்ட விடத்திலும் உன்னுடையவழகு காணவும் பெற்றிலேன் என்கிறார். அதாவது- கரணங்களையொழியத் தம்முடைய இழவு சொல்லுகிறபடி- “ப்ரஜைகளின் இழவும் பசியும் சொன்னார் கீழ்; தமிழவும் பசியும் சொல்லுகிறார் மேல்” என்பது ஈடு) 7
ஆவியே! ஆரமுதே;என்னை ஆளுடைத் தூவி அம் புள்ளுடையாய்! சுடர் நேமியாய்! பாவியேன் நெஞ்சம் புலம்பப் பலகாலும் கூவியும் காணப்பெறேன் உன கோலமே.–3-8-7
பதவுரை Show / Hide
ஆவியே,Aaviyae - என் உயிராயிருப்பவனே!
ஆர் அமுதே!,Aar amudhe - அருமையான அமுதம் போன்றவனே!
என்னை ஆள் உடை,Ennai aal udai - என்னை அடிமை கொண்ட
அம் தூவி புள் உடையாய்,Am thoovi pul udaiyaai - அழகிய சிறகுள்ள கருத்மானை வாகனமாக வுடையவனே!
சுடர் நேமியாய்,Sudar naemiyaai - ஒளிமிக்க திருவாழியையுடையவனே!
உனகோலம்,Unakolam - உனது வடிவழகை
பாவியேன்,Paaviyaan - பாவியாகிய நான்
நெஞ்சம் புலம்ப பலகாலும் கூவியும்,Nenjam pulamba palakaalum kooviyum - மனம் துடிக்கப் பலகால் கூப்பிட்டும்
காணப்பெறேன்,Kaanapperaen - கண்டு அநுபவிக்கப்பெற்றிலேன்