| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2980 | திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (மஹாபாபியாகையாலே நெஞ்சின் விடாய் தீர்க்கவும் பெற்றிலேனான நான் நெடுநாள் கூப்பிட்ட விடத்திலும் உன்னுடையவழகு காணவும் பெற்றிலேன் என்கிறார். அதாவது- கரணங்களையொழியத் தம்முடைய இழவு சொல்லுகிறபடி- “ப்ரஜைகளின் இழவும் பசியும் சொன்னார் கீழ்; தமிழவும் பசியும் சொல்லுகிறார் மேல்” என்பது ஈடு) 7 | ஆவியே! ஆரமுதே;என்னை ஆளுடைத் தூவி அம் புள்ளுடையாய்! சுடர் நேமியாய்! பாவியேன் நெஞ்சம் புலம்பப் பலகாலும் கூவியும் காணப்பெறேன் உன கோலமே.–3-8-7 | ஆவியே,Aaviyae - என் உயிராயிருப்பவனே! ஆர் அமுதே!,Aar amudhe - அருமையான அமுதம் போன்றவனே! என்னை ஆள் உடை,Ennai aal udai - என்னை அடிமை கொண்ட அம் தூவி புள் உடையாய்,Am thoovi pul udaiyaai - அழகிய சிறகுள்ள கருத்மானை வாகனமாக வுடையவனே! சுடர் நேமியாய்,Sudar naemiyaai - ஒளிமிக்க திருவாழியையுடையவனே! உனகோலம்,Unakolam - உனது வடிவழகை பாவியேன்,Paaviyaan - பாவியாகிய நான் நெஞ்சம் புலம்ப பலகாலும் கூவியும்,Nenjam pulamba palakaalum kooviyum - மனம் துடிக்கப் பலகால் கூப்பிட்டும் காணப்பெறேன்,Kaanapperaen - கண்டு அநுபவிக்கப்பெற்றிலேன் |