| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2981 | திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (“பலகாலும் கூவியுங் காணப்பெறேனுன கோலமே” என்ற தம்மைக் குறித்து எம்பெருமான் ‘உம்முடைய அபேக்ஷிதம் பூர்த்திசெய்கைக்கீடான காலம் வரவேண்டாவோ? என்று அருளிச் செய்ததாகக்கொண்டு, ‘காலமும் நீயிட்ட வழக்கன்றோ? நான் இழக்கக் தகுமோ?’ என்கிறார்.) 8 | கோலமே! தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன நீலமே! நின்று எனது ஆவியை ஈர்கின்ற சீலமே! சென்று செல்லாதன முன் நிலாம் காலமே! உன்னை எந்நாள் கண்டு கொள்வனே?–3-8-8 | கோலமே,Kolamey - அழகு தானே வடிவெடுத்தாற்போன்றுள்ளவனே! தாமரைக் கண்ணது,Thaamaraik kannathu - தாமரை போன்ற திருக்கண்களையுடையதாகிய ஓர் அஞ்சனம் நீலமே,Or anjanam neelamae - ஒப்பற்ற அஞ்சனமலைபோன்ற நீலநிறமுடையவனே! நின்று,Nindru - நிலை நின்று எனது ஆவியை,Enadhu aaviyai - என் ஆத்மாவை ஈர்கின்ற,Eerkinra - ஈடுபடுத்துகின்ற சீலமே,Seelamae - சீலகுணமே வடிவெடுத்திருப்பவனே! சென்று செல்லாதன முன் நிலாம் காலமே,Senru sellaadhana mun nilaam kaalamae - இறந்தகாலம் எதிர்காலம் நிகழ்காலம் என்னும் முக்காலங்களுக்கும் நியாமகனே! உன்னை,Unnai - உன்னை எந்நாள்,Ennaal - என்றைக்கு கண்டு கொள்வன்,Kandu kolvan - கண்டு அநுபவிப்பேன். |