திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2981 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2981திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (“பலகாலும் கூவியுங் காணப்பெறேனுன கோலமே” என்ற தம்மைக் குறித்து எம்பெருமான் ‘உம்முடைய அபேக்ஷிதம் பூர்த்திசெய்கைக்கீடான காலம் வரவேண்டாவோ? என்று அருளிச் செய்ததாகக்கொண்டு, ‘காலமும் நீயிட்ட வழக்கன்றோ? நான் இழக்கக் தகுமோ?’ என்கிறார்.) 8
கோலமே! தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன நீலமே! நின்று எனது ஆவியை ஈர்கின்ற சீலமே! சென்று செல்லாதன முன் நிலாம் காலமே! உன்னை எந்நாள் கண்டு கொள்வனே?–3-8-8
பதவுரை Show / Hide
கோலமே,Kolamey - அழகு தானே வடிவெடுத்தாற்போன்றுள்ளவனே!
தாமரைக் கண்ணது,Thaamaraik kannathu - தாமரை போன்ற திருக்கண்களையுடையதாகிய
ஓர் அஞ்சனம் நீலமே,Or anjanam neelamae - ஒப்பற்ற அஞ்சனமலைபோன்ற நீலநிறமுடையவனே!
நின்று,Nindru - நிலை நின்று
எனது ஆவியை,Enadhu aaviyai - என் ஆத்மாவை
ஈர்கின்ற,Eerkinra - ஈடுபடுத்துகின்ற
சீலமே,Seelamae - சீலகுணமே வடிவெடுத்திருப்பவனே!
சென்று செல்லாதன முன் நிலாம் காலமே,Senru sellaadhana mun nilaam kaalamae - இறந்தகாலம் எதிர்காலம் நிகழ்காலம் என்னும் முக்காலங்களுக்கும் நியாமகனே!
உன்னை,Unnai - உன்னை
எந்நாள்,Ennaal - என்றைக்கு
கண்டு கொள்வன்,Kandu kolvan - கண்டு அநுபவிப்பேன்.