Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2982 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2982திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (அடியவர்களைக் காத்தருளு முபாயத்தை நன்குணர்ந்தவனும் ப்ரதிகூல நிரஸகத்தில் வல்லவனுமான உன்னை நான் சேருவது என்றைக்கு? என்கிறார்.) 9
கொள்வன்நான், மாவலி! மூவடி தா’என்ற கள்வனே!
கஞ்சனை வஞ்சித்து வாணனை உள்வன்மை தீர,
ஓர் ஆயிரம் தோள் துணித்த புள்வல்லாய்!
உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே?–3-8-9
மாவலி,Maavali - ‘மஹாபலியே!
நான்,Naan - நான்
மூ அடி,Moo adi - மூன்றடி நிலத்தை
கொள்வன்,Kolvan - ஏற்றுக் கொள்வேன்,
தா,Thaa - கொடுப்பாயாக’
என்ற,Endra - என்ற சொன்ன
கள்வனே,Kalvane - வஞ்சகனே!
கஞ்சனை,Kanjanai - கம்ஸனை
வஞ்சித்து,Vanjiththu - தொலைத்து
வாணனை,Vaananai - பாணாசுரனை
உள் வன்மைதீர,Ul vanmaitheera - மன உறுதியானது அழியும்படி
ஓர் ஆயிரம் தோள் துணித்த,Or aayiram thol thuniththa - ஆயிரம் புயங்களையும் அறுத்த
புள் வல்லாய்,Pul vallaai - கருடவாஹனனே!
உன்னை,Unnai - உன்னை
எஞ்ஞான்று,Ennyaanru - எக்காலம்
பொருந்துவன்,Porundhuvan - அடையப்பெறுவேன்?