Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2983 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2983திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (உன்னுடைய குணங்களுக்குத் தோற்று உன்னைக் காணப்பெறாத வ்யஸனத்தாலே துக்கப்படுகிற நான் இன்ன மெத்தன காலம் துக்கப்படக்கடவேனென்கிறார்.) 10
பொருந்திய மாமருதின்னிடை போய எம் பொருந் தகாய்!
உன் கழல் காணிய பேதுற்று
வருந்தி நான் வாசக மாலை கொண்டு
உன்னையே இருந்திருந்து எத்தனை காலம் புலம்புவனே?–3-8-10
பொருந்திய,Porundhiya - ஒன்றோடொன்று பொருந்தி நின்ற
மா மருதின் இடை,Maa marudhin idai - பெரிய மருத மரங்களின் நடுவே
போய,Poya - தவழ்ந்து சென்று அவற்றைத் தள்ளி முறித்த
எம் பெரும்தகாய்,Em perumthagaai - எம்பெருமானே!
நான்,Naan - அடியேன்
உன் கழல்,Un kazhal - உனது திருவடிகளை
நாணிய,Naaniya - காணும் பொருட்டு
பேதுஉற்று,Paethu utrru - ஈடுபாடுடையேனாய்
வருந்தி,Varundhi - துக்கித்து
வாசகம் மாலை கொண்டு,Vaasagam maalai kondu - சொல் மாலைகளைக்கொண்டு
உன்னையே,Unnaiyae - உன்னையே நோக்கி
இருந்து இருந்து,Irundhu irundhu - இடைவிடாது
எத்தனை காலம்,Eththanai kaalam - எவ்வளவு காலம்
புலம்புவன்,Pulambuvan - கதறுவேன்?