| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2983 | திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (உன்னுடைய குணங்களுக்குத் தோற்று உன்னைக் காணப்பெறாத வ்யஸனத்தாலே துக்கப்படுகிற நான் இன்ன மெத்தன காலம் துக்கப்படக்கடவேனென்கிறார்.) 10 | பொருந்திய மாமருதின்னிடை போய எம் பொருந் தகாய்! உன் கழல் காணிய பேதுற்று வருந்தி நான் வாசக மாலை கொண்டு உன்னையே இருந்திருந்து எத்தனை காலம் புலம்புவனே?–3-8-10 | பொருந்திய,Porundhiya - ஒன்றோடொன்று பொருந்தி நின்ற மா மருதின் இடை,Maa marudhin idai - பெரிய மருத மரங்களின் நடுவே போய,Poya - தவழ்ந்து சென்று அவற்றைத் தள்ளி முறித்த எம் பெரும்தகாய்,Em perumthagaai - எம்பெருமானே! நான்,Naan - அடியேன் உன் கழல்,Un kazhal - உனது திருவடிகளை நாணிய,Naaniya - காணும் பொருட்டு பேதுஉற்று,Paethu utrru - ஈடுபாடுடையேனாய் வருந்தி,Varundhi - துக்கித்து வாசகம் மாலை கொண்டு,Vaasagam maalai kondu - சொல் மாலைகளைக்கொண்டு உன்னையே,Unnaiyae - உன்னையே நோக்கி இருந்து இருந்து,Irundhu irundhu - இடைவிடாது எத்தனை காலம்,Eththanai kaalam - எவ்வளவு காலம் புலம்புவன்,Pulambuvan - கதறுவேன்? |