| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2984 | திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (இத்திருவாய்மொழியின் இயல்மாத்திரத்தைத் தரித்தவர்கள் ஆரேனுமாகிலும் இதில் ஆஸாஸித்தபடியே அநுபவிக்கையில் தட்டில்லாத பரம போக்யமான திருநாட்டிலே செல்வரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது.) 11 | புலம்பு சீர்ப் பூமி யளந்த பெருமானை நலங்கொள்சீர் நன் குருகூர்ச் சடகோபன் சொல் வலங்கொண்ட வாயிரத்துள் இவையுமோர் பத்து இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே –3-8-11 | புலம்பு சீர்,Pulambu seer - (அனைவரும்) கொண்டாடுதற்குரிய திருக்குணங்களையுடையனாய் பூமி அளந்த பெருமானை,Bhoomi alandha perumaanai - பூமியை அளந்தவனான எம் பெருமானைக் குறித்து நலம் கொள் சீர்,Nalam kol seer - ஞானபக்தி முதலிய சிறப்பு வாய்ந்த நன் குருகூர் சடகோபன்;,Nan kurugoor Sadagopan - நன் குருகூர் சடகோபன்; சொல்,Sol - அருளிச்செய்த வலம் கொண்ட,Valam konda - மிக்க ஆற்றலையுடைய ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரம் பாசுரங்களுள் இவை ஓர் பத்தும்,Ivai or paththum - இப்பத்துப் பாசுரத்தையும் சொன்னால்,Sonnal - ஓதினால் யாவரும்,Yaavarum - (இன்னார் இனையார் என்னும் வாசியற) எல்லாரும் இலங்கு வான்,Ilangu vaan - சோதிமயமான பரமபதத்தை ஏறுவர்,Yeruvar - ஏறப்பெறுவர். |