திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2984 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2984திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (இத்திருவாய்மொழியின் இயல்மாத்திரத்தைத் தரித்தவர்கள் ஆரேனுமாகிலும் இதில் ஆஸாஸித்தபடியே அநுபவிக்கையில் தட்டில்லாத பரம போக்யமான திருநாட்டிலே செல்வரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது.) 11
புலம்பு சீர்ப் பூமி யளந்த பெருமானை நலங்கொள்சீர் நன் குருகூர்ச் சடகோபன் சொல் வலங்கொண்ட வாயிரத்துள் இவையுமோர் பத்து இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே –3-8-11
பதவுரை Show / Hide
புலம்பு சீர்,Pulambu seer - (அனைவரும்) கொண்டாடுதற்குரிய திருக்குணங்களையுடையனாய்
பூமி அளந்த பெருமானை,Bhoomi alandha perumaanai - பூமியை அளந்தவனான எம் பெருமானைக் குறித்து
நலம் கொள் சீர்,Nalam kol seer - ஞானபக்தி முதலிய சிறப்பு வாய்ந்த
நன் குருகூர் சடகோபன்;,Nan kurugoor Sadagopan - நன் குருகூர் சடகோபன்;
சொல்,Sol - அருளிச்செய்த
வலம் கொண்ட,Valam konda - மிக்க ஆற்றலையுடைய
ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரம் பாசுரங்களுள்
இவை ஓர் பத்தும்,Ivai or paththum - இப்பத்துப் பாசுரத்தையும்
சொன்னால்,Sonnal - ஓதினால்
யாவரும்,Yaavarum - (இன்னார் இனையார் என்னும் வாசியற) எல்லாரும்
இலங்கு வான்,Ilangu vaan - சோதிமயமான பரமபதத்தை
ஏறுவர்,Yeruvar - ஏறப்பெறுவர்.