Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2985 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2985திருவாய்மொழி || (3-9–சொன்னால் விரோதமிது) (மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்) (வேறு சிலரைக் கவி பாடுகின்றவர்களுக்கு ஹிதமுரைக்க இழிந்த ஆழ்வார் அவர்களுக்கு ருசி பிறக்கைக்காகத் தம்முடைய மதத்தை முந்துறமுன்னம் அருளிச் செய்கிறார்.) 1
சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!
என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து
என் ஆனை என் அப்பன், எம்பெருமான் உளனாகவே.–3-9-1
இது,Idhu - இப்போது நான் சொல்லும் ஹிதவார்த்தையானது
சொன்னால்,Sonnal - சொல்லப்படுமாகில்
விரோதம்,Virodham - உங்களுக்கு அநிஷ்டமாக இருக்கும்
ஆகிலும்,Aagilum - ஆனாலும்
சொல்லுவன்,Solluvan - உங்கள் அநர்த்தத்தைப் பொறுத்திருக்கமாட்டாமையினால் சொல்லியே தீர்வேன்
கேண்மின்,Kenmin - காது கொடுத்துக்கேளுங்கள்
வண்டு,Vandu - வண்டுகளானவை
தென்னா தெனா என்று,Thennaa thenaa endru - தென்னா தென்னாவென்று ரீங்காரஞ் செய்யப்பெற்ற
திருவேங்கடத்து,Thiruvengadathu - திருமலையிலே
என் ஆனை,En aanai - என்னுடைய யானை போன்றவனும்
என் அப்பன்,En appan - எனக்கு மஹோபகாரகனுமான
எம்பெருமான்,Emperumaan - ஸ்வாமி
உளன் ஆக,Ulan aaga - என் கவிக்கு இலக்காயிருக்கும்போது
என் நாவில் இன் கவி,En naavil in kavi - எனது நாவினின்று உண்டான மதுரமான கவிகளை
யான்,Yaan - நான்
ஒருவர்க்கும்,Oruvarkkum - வேறொருவர்க்கும்
கொடுக்கிலேன்,Kodukkilaen - கொடுக்கமாட்டேன்