Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2986 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2986திருவாய்மொழி || (3-9–சொன்னால் விரோதமிது) (மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்) (உண்மையாயும் பர்பூர்ணமாயுமுள்ள கல்யாணகுண சும்பத்துக்களை யுடையனாயிருந்துள்ள எம்பெருமானை விட்டு அஸத் கல்பராய் அற்பு ஸம்பத்துகளையுடையரானவர்களைக் குறித்துக் கவி பாடுவாரை நிந்திக்கிறார்.) 2
உளனாகவே எண்ணித் தன்னை ஒன்றாகத் தன் செல்வத்தை
வளனா மதிக்கும் இம் மானிடத்தைக் கவி பாடி என்
குளன் ஆர் கழனி சூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே
உளன் ஆய எந்தையை எந்தை பெம்மானை ஒழியவே?–3-9-2
குளன் ஆர்,Kulan aar - குளங்கள் நிறைந்த
கழனி சூழ்,Kazhani soozh - கழனிகளால் சூடுப்பட்ட
கண்,Kann - இடமகன்ற
நன்,Nan - விலக்ஷணமான
குறுங்குடி,Kurungudi - திருக்குறுங்குடியிலே
மெய்ம்மை,Meimmai - ஸௌலப்யம் முதலிய குணங்களோடு கூடி உண்மையாக
உளன் ஆய,Ulan aay - உறைபவனான
எந்தையை எந்தை பெம்மானை ஒழிய,Endhaiyai endhai pemmaanai ozhiyya - என் குலநாதனைத் தவிர
தன்னை,Thannai - அஸத்கல்பனான தன்னை
உளன் ஆகவே,Ulan aagavae - ஸத்தானவனாகவே கொண்டு
ஒன்று ஆக எண்ணி,Ondru aaga enni - ஒரு பொருளாக நினைத்து
நன் செல்வத்தை,Nan selvaththai - தன்னதாக அபிமானித்த அற்ப செல்வத்தை
வள் ஆ,Val aa - மிகவும் மேம்பாடாக
மதிக்கும்,Mathikkum - எண்ணியிருக்கிற
இம் மானிடத்தை,Im maanidaththai - இந்த அற்ப மனிதர்களை
கவி போடி என்,Kavi podi en - கவி பாடுவதனால் என்ன பலன்?