திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 2987 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2987திருவாய்மொழி || (3-9–சொன்னால் விரோதமிது) (மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்) (பரம விலக்ஷணனாய் மஹோபகாரகனான எம்பெருமானிருக்க அவனை விட்டு அற்ப மனிசரைக் கவி பாடி என்ன பலன்? என்கிறார்.) 3
ஒழிவு ஒன்று இலாத பல் ஊழிதோறு ஊழி நிலாவப் போம் வழியைத் தரும் நங்கள் வானவர் ஈசனை நிற்கப் போய்க் கழிய மிக நல்ல வான்கவி கொண்டு புலவீர்காள்! இழியக் கருதி ஓர் மானிடம் பாடல் என்னாவதே?–3-9-3
பதவுரை Show / Hide
ஒழிவு ஒன்று இல்லாத,Ozhivu ondru illaadha - ஒழிவு சிறிதுமில்லாத
பல ஊழி ஊழிதோறு,Pala oozhi oozhithooru - காலத்துவமுள்ளதனையும்
நிலாவ,Nilaava - நிலைநின்று அநுபவிக்கும்படி
போம்,Pom - செல்லக்கடவதான
வழியை,Vazhiyai - வழிபாடாகிய கைங்கரியத்தை
தரும்,Tharum - தந்தருள்கின்ற
நங்கள் வானவர் ஈசனை நிற்க போய்,Nangal vaanavar eesanai nirka poay - நமது தேவாதி தேவனான பெருமானிருக்க, அவனையுமேக்ஷித்து
கழிய மிக நல்ல,Kazhiya miga nalla - மிகவும் இனிய
வான் கவி கொண்டு,Vaan kavi kondu - திவ்யாமன கவிகளைக் கொண்டு
புலவீர்காள்,Pulaveerkaal - பண்டிதர்களே!
இழிய கருதி,Izhiya karuthi - அதோகதியையடைய நினைத்து
ஓர் மானிடம்,OrMaanidam - அற்ப மனிதர்களை
பாடல்,Paadal - பாடுதலால்
ஆவது என்,Aavadhu en - (உங்கட்கு) உண்டாகும் பயன் யாது?