| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2987 | திருவாய்மொழி || (3-9–சொன்னால் விரோதமிது) (மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்) (பரம விலக்ஷணனாய் மஹோபகாரகனான எம்பெருமானிருக்க அவனை விட்டு அற்ப மனிசரைக் கவி பாடி என்ன பலன்? என்கிறார்.) 3 | ஒழிவு ஒன்று இலாத பல் ஊழிதோறு ஊழி நிலாவப் போம் வழியைத் தரும் நங்கள் வானவர் ஈசனை நிற்கப் போய்க் கழிய மிக நல்ல வான்கவி கொண்டு புலவீர்காள்! இழியக் கருதி ஓர் மானிடம் பாடல் என்னாவதே?–3-9-3 | ஒழிவு ஒன்று இல்லாத,Ozhivu ondru illaadha - ஒழிவு சிறிதுமில்லாத பல ஊழி ஊழிதோறு,Pala oozhi oozhithooru - காலத்துவமுள்ளதனையும் நிலாவ,Nilaava - நிலைநின்று அநுபவிக்கும்படி போம்,Pom - செல்லக்கடவதான வழியை,Vazhiyai - வழிபாடாகிய கைங்கரியத்தை தரும்,Tharum - தந்தருள்கின்ற நங்கள் வானவர் ஈசனை நிற்க போய்,Nangal vaanavar eesanai nirka poay - நமது தேவாதி தேவனான பெருமானிருக்க, அவனையுமேக்ஷித்து கழிய மிக நல்ல,Kazhiya miga nalla - மிகவும் இனிய வான் கவி கொண்டு,Vaan kavi kondu - திவ்யாமன கவிகளைக் கொண்டு புலவீர்காள்,Pulaveerkaal - பண்டிதர்களே! இழிய கருதி,Izhiya karuthi - அதோகதியையடைய நினைத்து ஓர் மானிடம்,OrMaanidam - அற்ப மனிதர்களை பாடல்,Paadal - பாடுதலால் ஆவது என்,Aavadhu en - (உங்கட்கு) உண்டாகும் பயன் யாது? |