Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2988 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2988திருவாய்மொழி || (3-9–சொன்னால் விரோதமிது) (மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்) (கவிபாடினார்க்கு ஸகலவரிசைகளும் கொடுக்கவல்லவனான எம்பெருமானை விட்டு இன்றிருப்பார் நாளையிரார் என்னும்படியான அஸ்திரங்களைக் கவிபாடுவதில் என்ன பயனுண்டென்கிறார்.) 4
என்னாவது, எத்தனை நாளைக்குப் போதும், புலவீர்காள்!
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும்பொருள்!
மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்,
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே.–3-9-4
புலவீர்காள்,Pulaveerkaal - பண்டிதர்களே!
மன்னா,Manna - அல்பாயுஸ்ஸுக்களான
மனிசரை,Manisarai - மனிதர்களை
பாடி,Paadi - கவிபாடி
படைக்கும்,Padaikkum - (அதனால்) நீங்களடைகின்ற
பெரும்பொருள்,Perumporul - பெருஞ்செல்வம்
என் ஆவது,En aavadhu - யாதாவது?
எத்தனை நாளைக்கு போதும்,Eththanai naalaikku poadhum - (அது) எத்தனை நாளைக்குப் பற்றும்?
வின் ஆர்,Vin aar - ஒளிநிறைந்த
மணி முடி,Mani mudi - மணிமகுடத்தை யுடையவனான
விண்ணவர்தாதையை,Vinnavarthaathaiyai - தேவாதி தேவனை
பாடினால்,Paadinaal - கவிபாடினால் (அப்பெருமான் உங்களை)
தன் ஆகவே கொண்டு,Than aagavae kondu - தனக்கு அடிமையாகவே கொண்டு
சன்மம் செய்யாமையும் கொள்ளும்,Sanmam seiyyaamaiyum kollum - இனிப் பிறவிகள் உண்டாகாதபடியாகவும் அங்கீகரித்தருள்வன்.