Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2990 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2990திருவாய்மொழி || (3-9–சொன்னால் விரோதமிது) (மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்) (ஜீவனம் உஜ்ஜீவனம் என்று இரண்டுண்டு; எம்பெருமான் திறத்துக் கவிபாடினால் உஜ்ஜீவிக்க வழியுண்டெனினும், ஜீவிக்கவழி தேடுகிற நாங்கள் வரஸ்துதிகளிலே இழிகிறோம் என்று சிலர் சொல்லுவதாகக் கொண்டு நீசரைக் கவிபாடி ஜீவிப்பதிற் காட்டிலும் உடம்பு நோவத் தொழில் செய்து ஜீவித்தல் நன்று என்கிறார்.) 6
வம்மின் புலவீர்!நும் மெய் வருத்திக் கை செய்து உய்ம்மினோ!
இம்மன் உலகில் செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்;
நும் இன் கவி கொண்டு நும்நும் இட்டா தெய்வம் ஏத்தினால்
செம்மின் சுடர்முடி என் திருமாலுக்குச் சேருமே.–3-9-6
புலவீர்,Pulaveer - புலவர்களே!
வம்மின்,Vammin - (நரஸ்துதியை விட்டு) வாருங்கள்;
நும் மெய்,Num mei - உங்களது உடலை
வருத்தி,Varuththi - சிரமப்படுத்தி
கை செய்து,Kai seithu - தொழில் செய்து
உய்ம்மின்,Uymmmin - ஜீவியுங்கோள்:
மன்,Man - (ப்ரவாஹரூபேண) நித்யமாயிருக்கின்ற
இ உலகினில்,I ulagil - இந்த லோகத்தில்
செவ்வர்,Sevvar - (உங்களுக்குப் போதுமானவை கொடுக்கவல்ல) ஸ்ரீமான்கள் கிடையார்;
இப்போது நோக்கினோம்,Ippoathu nokkinom - (இதனை) இப்போது ஆராய்ந்து அறிந்தோம்;
நும்,Num - உங்களுடைய
இன் கவி கொண்டு,In kavi kondu - மதுரமான கவிகளைக் கொண்டு
நும் நும்,Num num - உங்களுங்களுடைய
இட்டா தெய்வம்,Ittaa deivam - இஷ்ட தெய்வத்தை
ஏத்தினால்,Yaeththinaal - துதி செய்தால் (அந்தத் துதிமொழிகளிற் கூறும் குணங்கள் அவர்களிடத்து இல்லாமையாலே அவை)
செம் மின் சுடர் முடி,Sem min sudar mudi - செவ்வனே மின்னுகின்ற வொளி பொருந்திய திருமுடியை யுடைய
என் திருமாலுக்கு,En thirumaalukku - எனக்கு ஸ்வாமியான லக்ஷ்மீநாதனுக்கு
சேரும்,Serum - அந்வயிக்கும்.