திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 2993 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2993திருவாய்மொழி || (3-9–சொன்னால் விரோதமிது) (மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்) (பரமோதாரனான எம்பெருமானாலே தன்னைக் கவிபாடுகையே ஸ்வபாவமாகப் பண்ணப் பெற்ற வெனக்கு இதரஸ்துதிகளில் அதிகாரமில்லையென்கிறார்.) 9
வாய் கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்; ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்; சாய் கொண்ட இம்மையும் சாதித்து, வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் என்று வீடும் தரும் நின்று நின்றே.–3-9-9
பதவுரை Show / Hide
வாய்கொண்டு,Vaikonddu - (அருமையான) வாக்கைக் கொண்டு
மானிடம்,Maanidam - அற்பமனிதர்களை
பாட வந்த,Paada vandha - பாடப்பிறந்த
கவியேன் அல்லேன்,Kaviyen allen - கவி நானல்லேன்
ஆய்,Aay - (வேதாந்தங்களினால்) ஆராயப்பட்ட
சீர் கொண்ட,Seer kondda - திருக்குணங்களையுடைய
வள்ளல்,Vallal - உதாரனாகிய
ஆழி பிரான்,Aazhi praan - சக்கரக்கையனான பெருமான்
எனக்கே உளன்,Enakke ulan - என் வாக்குக்கே இலக்காகவுள்ளான். (அப்பெருமான்)
சாய் கொண்ட,Saai konda - அழகிய
இம்மையும்,Immaiyum - இஹலோகத்து அர்ச்சாவதார அநுபவத்தையும்
சாதித்து,Saadiththu - உண்டாக்கித்தந்து
வானவர் நாட்டையும் நீ கண்டுகொள் என்று,Vaanavar naattaiyum nee kanddukol endru - பரமபதாநுபவத்தையும் நீ பெறுவாயாக என்று சொல்லி
வீடும்,Veedum - மோக்ஷ சுகத்தையும்
நின்று நின்று,Nindru nindru - அடைவு பட
தரும்,Tharum - கொடுத்தருள்வன்.