Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2993 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2993திருவாய்மொழி || (3-9–சொன்னால் விரோதமிது) (மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்) (பரமோதாரனான எம்பெருமானாலே தன்னைக் கவிபாடுகையே ஸ்வபாவமாகப் பண்ணப் பெற்ற வெனக்கு இதரஸ்துதிகளில் அதிகாரமில்லையென்கிறார்.) 9
வாய் கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்;
ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்;
சாய் கொண்ட இம்மையும் சாதித்து, வானவர் நாட்டையும்
நீ கண்டு கொள் என்று வீடும் தரும் நின்று நின்றே.–3-9-9
வாய்கொண்டு,Vaikonddu - (அருமையான) வாக்கைக் கொண்டு
மானிடம்,Maanidam - அற்பமனிதர்களை
பாட வந்த,Paada vandha - பாடப்பிறந்த
கவியேன் அல்லேன்,Kaviyen allen - கவி நானல்லேன்
ஆய்,Aay - (வேதாந்தங்களினால்) ஆராயப்பட்ட
சீர் கொண்ட,Seer kondda - திருக்குணங்களையுடைய
வள்ளல்,Vallal - உதாரனாகிய
ஆழி பிரான்,Aazhi praan - சக்கரக்கையனான பெருமான்
எனக்கே உளன்,Enakke ulan - என் வாக்குக்கே இலக்காகவுள்ளான். (அப்பெருமான்)
சாய் கொண்ட,Saai konda - அழகிய
இம்மையும்,Immaiyum - இஹலோகத்து அர்ச்சாவதார அநுபவத்தையும்
சாதித்து,Saadiththu - உண்டாக்கித்தந்து
வானவர் நாட்டையும் நீ கண்டுகொள் என்று,Vaanavar naattaiyum nee kanddukol endru - பரமபதாநுபவத்தையும் நீ பெறுவாயாக என்று சொல்லி
வீடும்,Veedum - மோக்ஷ சுகத்தையும்
நின்று நின்று,Nindru nindru - அடைவு பட
தரும்,Tharum - கொடுத்தருள்வன்.