திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 2994 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2994திருவாய்மொழி || (3-9–சொன்னால் விரோதமிது) (மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்) (தன்னைத் துதிப்பதற்கென்றே கரணகளேபரங்களைக் கொடுத்தருளினவனான எம்பெருமான் திறத்திலே கவிபாடப்பெற்ற வெனக்கு மற்றொருவரைக் கவிபாடுதல் ஏலாது என்கிறார்.) 10
நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய்ச் சென்று சென்றாகிலும் கண்டு,சன்மம் கழிப்பான் எண்ணி, ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?–3-9-10
பதவுரை Show / Hide
பல நாள்,Palanaal - அநேக காலம்
நின்று நின்று,Nindru nindru - இருந்து
உய்க்கும்,Uykkum - சேதுநனைத் தன் வசத்திலே யாக்குகின்ற
இ உடல்,eUdal - இந்த சரீரத்தை
நீங்கி போய்,Neengi poi - விட்டொழிந்து போய்
சென்று சென்று ஆகிலும்,Sendru sendru aagilum - இப்படியே பல பல ஜனன மரணங்கள் நடந்தபின்பாகிலும் (ஏதேனுமொரு காலத்தில்)
கண்டு,Kandu - தன்னைக் கண்டு
சன்மம்,Sanmam - பிறவியை
கழிப்பான்,Kazhipaan - கழிக்கக்கூடுமென்று
எண்ணி,Enni - திருவுள்ளம் பற்றி
ஒன்றி ஒன்றி,Ondri ondri - (ஒருகாலும் சோம்பிக் கைவிடாமல்) மேன்மேலும் ஊக்கங்கொண்டு
உலகம் படைத்தான்,Ulagam padaithaan - உலகங்களைப் படைத்து வருகின்ற எம்பெருமானுடைய
கவி ஆயினேற்கு,Kavi aayineerku - கவியாக அமைந்த எனக்கு
இனி என்றும் என்றும்,eni endrum endrum - இனி எந்நாளும்
மற்று ஒருவர் கவி,Matru oruvar kavi - வேறொருவரைக் கவிபாடுதல்
ஏற்குமே,Earkume - தகுமோ? (தகாது)