Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2995 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2995திருவாய்மொழி || (3-9–சொன்னால் விரோதமிது) (மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்) (இத்திருவாய்மொழி கற்றார்க்கு, பிறரைக்கவிபாடுவதற்குரிய நீசப்பிறவி நேராதென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் றனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர்பத்து
ஏற்கும் பெரும்புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே.–3-9-11
ஏற்கும் பெரும் புகழ்,Erkum perum pugazh - தனக்கு ஏற்றிருக்கின்ற மிக்க புகழுடையனாய்
வானவர் ஈசன் வண் குருகூர்ச் சடகோபன்,Vaanavar eesan van kurugoor Sadagopan - நித்யஸூரி நாதனான எம்பெருமான் ஏற்கும் பெரும்புகழ் குருகூர் சடகோபன்
சொல்,Sol - அருளிச்செய்த
ஏற்கும் பெரும் புகழ்,Yerkum perum pugazh - ஏற்ற பெரும்புகழையுடைய
ஆயிரத்துள்,Aayiraththul - இவ்வாயிரத்தினுள்
கண்ணன் தனக்கு,Kannnan thanakku - கண்ணபிரான் விஷயமாக
ஏற்கும் பெரும் புகழ்,Yerkum perum pugazh - தகுதியான சிறந்த புகழையுடைத்தான
இவை ஓர் பத்தும்,Evai OrPaththum - இந்தத் திருவாய்மொழியை
சொல்ல வல்லார்க்கு,Solla vallaarkku - ஓதவல்லவர்க்கு
சன்மம் இல்லை,Sanmam ellai - மறுபிறப்பு இல்லை