திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2996 | திருவாய்மொழி || (3-10–சன்மம் பலபல) (திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை எனல்.) (திவ்யாயுதங்களோடே எம்பெருமான் வந்து அவதரிக்கும்படியை அநுஸந்திக்கப் பெற்றவெனக்கு ஒரு குறையுமில்லையென்கிறார்.) 1 | சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச் சங்கொடு சக்கரம் வில்
ஒண்மை யுடைய உலக்கை ஒள் வாள் தண்டு கொண்டு புள் ஊர்ந்து உலகில்
வன்மை உடைய அரக்கர் அசுரரை மாளப் படை பொருத
நன்மை உடையவன் சீர் பரவப் பெற்ற நான் ஓர் குறைவு இலனே.–3-10-1 | பதவுரை Show / Hideபலபல,Palapala - பலபல வகைப்பட்ட சன்மம்,Sanmam - அவதாரங்களை செய்து,Seidhu - பண்ணி வெளிப்பட்டு,Velippattu - ஸம்ஸாரிகளின் கண்ணுக்கும் புலப்பட்டு சங்கொடு சக்கரம்,Sangodu sakkaram - சங்கு சக்கரங்களையும் வில்,Vil - சார்ங்கத்தையும் ஒண்மை உடைய,Onmai udaiya - ஒளி பொருந்திய உலக்கை,Ulakkai - முஸலத்தையும் ஒள் வாள்,Ol vaal - அழகிய கந்தக வாளையும் தண்டு,Thandu - கௌமோதகி யென்னும் கதையையும் கொண்டு,Kondu - ஏந்திக்கொண்டு புள் ஊர்ந்து,Pul oornthu - பக்ஷிராஜனை வாஹனமாகக்கொண்டு உலகில்,Ulagil - உலகத்திலுள்ள வன்மை உடைய,Vanmai udaiya - கடினமான மனமுடைய அரக்கர்,Arakkar - அரக்கர்களும் அசுரர்,Asurar - அசுரர்களம் மாள,Maala - மாண்டொழியும்படி படை பொருத,Padai porudha - ஆயுதப்பிரயோகம் பண்ணிப் போர் செய்து தொலைத்து நன்மை உடையவன்,Nanmai udaiyavan - நன்மை மிக்கவனான எம்பெருமானுடைய சீர்,Seer - திருக்குணங்களை பரவ பெற்ற நான்,Parava petra naan - துதிக்கப்பெற்ற அடியேன் ஓர் குறையு இலன்,Or kuraiyu ilan - ஒரு குறையுமுடையே னல்லேன். |