| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2997 | திருவாய்மொழி || (3-10–சன்மம் பலபல) (திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை எனல்.) (இந்நிலத்தில் வந்து திருவவதாரம் பண்ணுதற்கு அடியாகத் திருப்பாற்கடலில் கண்வளர்ந்தருளிப் பிறகு வஸுதேவர் திருமகனாய் வந்து பிறந்தருளி ஆச்ரித விரோதிகளைத் தொலைந்தருளின கண்ணபிரானுடைய கீர்த்தியைப் பலபடியும் அநுபவிக்கப்பெற்ற நான் மேன்மேலும் இங்ஙனம் அநுபவிப்பதில் யாதொருதடையுமுடையேனல்லேனென்கிறார்.) 2 | குறைவு இல் தடம் கடல் கோள் அரவு ஏறித்தன் கோலச் செந்தாமரைக் கண் உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த ஒளி மணி வண்ணன் கண்ணன் கறை அணி மூக்குடைப் புள்ளைக் கடாவி அசுரரைக் காய்ந்த அம்மான் நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டு இலனே.–3-10-2 | குறைவு இல் தட கடல்,Kuraivu il thada kadal - குறையற்ற (பரிபூர்ணமான) விசாலமான திருப்பாற் கடலிலே கோள் அரவு ஏறி,Kol aravu eri - மிடுக்கனான திருவனந்தாழ்வான் மீது ஏறி தன்,Than - தன்னுடைய கோலம்,Kolam - அழகிய செம் தாமரை கண்,Sem thaamarai kan - செந்தாமரை போன்ற திருக்கண்கள் உறைபவன் போல,Uraipavan pola - துயிலப் பெற்றவன் போல ஓர் யோகு புணர்ந்த,Or yogu punarntha - யோக நித்திரை செய்தருள்கின்ற ஒளி மணிவண்ணன்,Oli manivannan - அழகிய நீலமணி போன்ற நிறத்தனும் கண்ணன்,Kannan - கண்ணனாய்த் திருவவதரித்தவனும் கறை அணி மூக்கு உடை,Karai ani mookku udai - கறையை அணிந்த மூக்குடையவனான புள்ளை,Pullai - பக்ஷி ராஜனை கடாவி,Kadaavi - நடத்தி அசுரரை காய்ந்த,Asurarai kaaintha - அசுரர்களை முடித்தவனுமான அம்மான்,Ammaan - எம்பெருமானுடைய நிறை புகழ்,Nirai pugazh - நிறைந்த புகழை யான்,Yaan - நான் ஏத்தியும்,yethiyum - துதித்தும் பாடியும்,Paadiyum - இசையில் அமைத்துப் பாடியும் ஆடியும்,Aadiyum - கூத்தாடியும் ஒரு முட்டு இலன்,Oru muttu ilan - (எம்பெருமானை யநுபவிப்பதில் ) ஒரு தடையுமுடையேனல்லேன். |