| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2999 | திருவாய்மொழி || (3-10–சன்மம் பலபல) (திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை எனல்.) (தேவதாந்தரங்களைப் பற்றினவர்களுக்கு அவர்கள் ரக்ஷகரல்லர் என்பதையும், தன்னைப் பற்றினவர்களைத் தான் கைவிடுவதில்லையென்பதையும் நன்கு காட்டிக்கொடுத்த எம்பெருமானைப் பற்றினவெனக்கு ஒரு குறையுமில்லையென்கிறார்.) 4 | பரிவு இன்றி வாணனைக் காத்தும் என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்த திரிபுரம் செற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலையப் பொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் பொன் சக்கரத்து அரியினை அச்சுதனைப் பற்றி யான் இறையேனும் இடர் இலனே.–3-9-4 | அன்று,Anru - முன்பொருகாலத்தில் வாணனை,Vaananai - பாணாசுரனை பரிவு இன்றி,Parivu indri - வருத்தமின்றியே காத்தும் என்று,Kaaththum enru - ‘காக்கக்கடவோம்’ என்று அபிமானித்து படையொடுங்,Padaiyodung - ஆயுதங்களோடு கூட வந்து எதிர்ந்த,Vandhu ethirntha - வந்து எதிரிட்ட திரிபுரம் பெற்றவனும்,Thiripuram petrravanum - த்ரிபுரதஹநம் செய்தவனான சிவபிரானும் மகனும்,Makanum - அவன் மகனான ஆறுமுகனும் பின்னும்,Pinnum - அதற்குமேலே அங்கியும்,Angiyum - அக்நியும் போர்,Por - போர்க்களத்திலே தொலைய,Tholaiya - பங்கமடையும்படி, பொரு சிறை புள்ளை கடாவிய மாயனை,Poru sirai pullai kadaviya maayanai - பொருநின்ற சிறகையுடைய பக்ஷிராஜனை கடத்திய ஆச்சர்ய சக்தியுக்தனும் ஆயனை,Aayanai - கோபாலக்ருஷ்ணனாய் அவதரித்தவனும் பொன்சக்கரத்து,Ponsakkarathu - அழகிய திருவாழியையுடையவனாய்க் கொண்டு அரியினை,Ariyinai - விரோதிகளை அழியச் செய்பவனும் அச்சுதனை,Achchuthanai - அடியார்களைக் கைவிடாதவனுமான எம்பெருமானை பற்றி,Patri - அடைந்து யான்,Yaan - அடியேன் இறையேனும்,Iraiyenum - சிறிதளவும் இடம் இவன்,Idam ivan - இடைஞ்சலுடையே னல்லேன். |