| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3001 | திருவாய்மொழி || (3-10–சன்மம் பலபல) (திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை எனல்.) (தன்னுடைய அப்ராக்ருதமான திவ்யமான விக்ரஹத்தை இதரஸஜாதீயமாக்கி ஸம்ஸாரிகளின் கட்புலனுக்கு இலக்காக்கி வைத்த கண்ணபிரானுடைய திருக்குணங்களை அனுபவிக்கப் பெற்றவெனக்கு ஒரு துன்பமுமில்லை யென்கிறார்.) 6 | துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி நின்ற வண்ணம் நிற்கவே துயரின் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து துயரங்கள் செய்து தன் தெய்வ நிலை உலகில் புக உய்க்கும் அம்மான் துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஓர் துன்பம் இலனே.–3-10-6 | துயர் இல்,Thuyar il - துன்பமுற்றதும் சுடர் ஒளி,Sudar oli - சிறந்த தேஜோரூபமுமான தன்னுடைய சோதி,Thannudaiya sothi - தன்னுடைய விக்ரஹமானது நின்ற வண்ணமே நிற்க,Nindra vannamae nirka - அங்கு இருக்கும்படியிலொன்றுங் குறையாமே நிற்கும்படியாக துயரில் மலியும் மனிசப் பிறவியில் தோன்றி,Thuyaril maliya manisap piraviyil thonri - துக்கத்திலே யழுந்தின மனிதருடைய னோனிகளிலே பிறந்து. கண் காண வந்து,Kan kaana vandhu - (அனைவரும்) கண்ணாற் காணும்டியாக வந்து துயரங்கள் செய்து,Thuyarangal seithu - (அனைவரையும் ) ஈடுபடுத்தி தன் தெய்வம் நிலை,Than deivam nilai - தன்னுடைய அப்ராக்ருத ஸ்வபாவத்தை உலகில்,Ulagil - இவ்வுலகத்தின் கண் புக உய்க்கும்,Puga uykkum - பிரசுரப்படுத்தின அம்மான்,Ammaan - ஸ்வாமியாய் துயரம் இல் சீர்,Thuyaram il seer - ஹேய குணங்கள் இன்றிக்கே கல்யாணகுண மயனாய் மாயன்,Maayan - ஆச்சர்ய சக்தியுக்தனான கண்ணன்,Kannan - கண்ணபிரானுடைய புகழ்,Pugazh - கீர்த்திகளை துற்ற யான்,Thutra yaan - அநுபவிக்கப்பெற்றநான் ஓர் துன்பம் இலன்,Or thunbam ilan - ஒரு துன்பமுமுடையே னல்லேன் |