திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3002 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3002திருவாய்மொழி || (3-10–சன்மம் பலபல) (திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை எனல்.) (புண்யபாய ரூபகருமங்களுக்கும், அவற்றைச் சம்பாதிப்பதற்குரிய இடமான லோகங்களுக்கும், அவற்றின் பலன்களை யனுபவிக்குமிடான லோகங்களுக்கும், அப்பலன்களை அனுபவிக்குமவர்களான ஆன்மாக்களுக்கும் நியாமகனாய் லீலாரஹமநுபவிக்கின்ற எம்பெருமானை யடையப் பெற்றதனால் ஒருவகையான அல்லலும் தமக்கில்லை யென்கிறார்.) 7
துன்பமும் இன்பமும் ஆகிய செய் வினையாய் உலகங்களுமாய் இன்பம் இல் வெந் நரகாகி இனிய நல்வான் சுவர்க்கங்களுமாய் மன்பல் உயிர்களும் ஆகிப் பலபல மாய மயக்குகளால் இன்புறும் இவ் விளையாட்டுடையானைப் பெற்று ஏதும் அல்லல் இலனே.–3-10-7
பதவுரை Show / Hide
துன்பமும் இன்பமும் ஆகிய,Thunbamum inbamum aagiya - துக்கத்திற்கும் சுகத்திற்கும் காரணமாகக் கூடிய
செய் வினை ஆய்,Sei vinai aay - புண்ய பாபரூப கருமங்களுக்கு நிர்வாஹனாய்
இனிய நல்வான் சுவர்க்கங்களும் ஆய்,Iniya nalvaan suvarkkangallum aay - மிகவும் நன்றாய்ச் சிறந்த ஸ்வர்க்க ப்ரதேசங்களுக்கும் நிர்வாஹகனாய்
மன் பல் உயிர்களும் ஆகி,Man pal uyirkalum aagi - நித்யரான வல பிராணிகளுக்கும் நிர்வாஹகனாய்
பல பல மாயம் மயக்குக்களால்,Pala pala maayam mayakkukkalal - பலவகைப்பட்ட ப்ரக்ருதி விகாரரூபமான மோஹ விகாரங்களாலே
உலகங்களும் ஆய்,Ulagangalum aay - உலகங்களுக்கும் நிர்வாஹகனாய்
இன்பம் இல் வெம் நரக ஆகி,Inbam il vem naraga aagi - இன்பமற்றகொடிய நரகலோகத்திற்கும் நிர்வாஹகனாய்
இன்பு உறும் இ விளையாட்டு உடையானை,Inbu urum i vilaiyaattu udaiyanai - ரஸாவஹமான விளையாடல்களை யுடையவனான எம்பெருமானை
பெற்று,Petru - அநுபவிக்கப்பெற்றதனால்
ஏதும் அல்லல் இலன்,Edhum allal ilan - சிறிதும் துக்கமுடையே னல்லலேன்