| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3003 | திருவாய்மொழி || (3-10–சன்மம் பலபல) (திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை எனல்.) (முன்னரண்டிகளால்-திருநாட்டில் எம்பெருமான் எழுந்தருளியிருக்குமிருப்பையும், பின்னடிகளால்-அவன் இந்நிலத்திற் செய்தருளுஞ் செயல்களையும் பேசி, இப்படிப்பட்ட எம்பெருமானையடையப் பெற்றதனால் தமக்கு யாதொரு துக்கமுமில்லையென்கிறார்.) 8 | அல்லல் இல் இன்பம் அளவு இறந்து எங்கும் அழகு அமர்சூழ் ஒளியன் அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் எல்லை இல் ஞானத்தன் ஞானம் அஃ தேகொண்டு எல்லாக் கருமங்களும் செய் எல்லை இல் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே.–3-10-8 | அல்லல் இல் இன்பம்,Allal il inbam - வருத்தம் சிறிதுங்கலசாத ஆனந்தகுணம் அளவு இறந்து,Alavu irandhu - அளவில்லாமல் இருக்கப்பெற்று எங்கும் அமர்,Engum amar - எங்கும் பரம்பின அழகு சூழ் ஒளியன்,Azhagu soozh oliyan - ஸௌந்தர்யத்தோடு சேர்ந்த லாவண்யமத்தையுடையவனாய் அல்லி மலர் மகள்,Alli malar magal - தாமரை மலரில் தோன்றிய பெரிய பிராட்டியோடு போகம்,Bogam - ஆனந்தானுபவத்தினாலுண்டாகிய மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான்,Mayakkugal aagiyum nirkum ammaan - வியாமோஹமே வடிவெடுத்திருக்கின்ற பெருமானாய் எல்லை இல் ஞானத்தன்,Ellai il gnanathan - எல்லையில்லாத ஞான விளக்கத்தையுடையனாய் ஞானம் அஃதே கொண்டு,Gnanam akthey kondu - அந்த ஞானத்øதையே கருவியாகக் கொண்டு கருமங்கல் எல்லாமும் செய்,Karumangal ellaamum sei - காரிவுலகங்களையெல்லாம் உண்டாக்குமவனாய் எல்லை இல்மாயனை,Ellai ilmaayanai - எல்லையில்லத ஆச்சரியசேஷ்டிதங்களையுடையவனான கண்ணனை,Kannanai - ஸ்ரீகிருஷ்ணபரமாத்மாவை தாள் பற்றி,Thaal patri - திருவடி தொழுது யான் ஓர் துக்கம் இலன்,Yaan or thukkam ilan - நான் ஒரு துக்கமுமுடைய னல்லேன் |