திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3007 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3007திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (உலகங்கட்கெல்லாம் ஓரரசாக வீற்றிருந்து வாழ்ந்தவர்களுங்கூட நாளடைவிலே தரித்ரர்களாய்த் தடுமாறும்படியைக் கட்கூடாகக் காணப்பெறலாயிருக்குமாகையாலே நித்ய ஸ்ரீமானான எம்பெருமானைப் பணிவதே பாங்கு என்கிறார்.) 1
ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர் கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர் பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.–4-1-1
பதவுரை Show / Hide
ஒரு நாயகம் ஆய்,Oru nayagam aayi - பூமண்டலம் முழுமைக்கும் அத்விதீயப்ரபுவாய்
ஓட,Oda - வெகுகாலமளவும்
உலகுஉடன்,Ulaguudan - உலகங்களை யெல்லாம்
ஆண்டவர்,Aandavar - அரசாட்சி புரிந்தவர்கள்
கரு நாய் கவர்ந்த காலர்,Karu naai kavarntha kaalar - (ஒரு காலவிசேஷத்திலே தரித்ரர்களாகி) கரிய நாய்களால் கவ்வப்பட்ட கால்களையுடையவராயும்
சிதைகிய பானையர்,Sithaigiya paanaiyar - உடைந்த பிச்சைப் பாத்திரத்தையுடைவர்களாயும் ஆகி
பெரு நாடு காண,Peru naadu kaana - உலகமெல்லாம் திரண்டுவந்து (பலிபவத்தை) காணும்படியாக
இம்மையிலே,Immaiyile - இப்பிறவியிலேயே
தாம்,Thaam - தாங்களே
பிச்சை கொள்வர்,Pichchai kolvar - பிச்சை யெடுப்பர் (செல்வத்தின் தன்மை இத்தகையதாதலால்)
திரு நாரணன்,Thiru Naaranan - ஸ்ரீ மந்நாராயணனுடைய
தாள்,Thaal - திருவடிகளை
காலம்பெற,Kaalampera - விரைவாக
சிந்தித்து,Sindhiththu - தியானித்து
உய்ம்மின்,Uymmmin - உஜ்ஜூவியுங்கோள்.