Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3008 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3008திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (மஹாப்ரபுக்களாயிருந்து நெடுங்காலம் தாங்கள் ஆண்ட ராஜ்யங்களை யிழப்பார் என்றது கீழ்ப்பாட்டில்; அரசாளுகிற நாளில் போக்யைகளாகக் கைக்கொண்ட மடவார்களையும் பகைவர்க்குப் பறிகொடுத்துப் பரிதாபப்படுவர்களென்கிறாரிதில்) 2
உய்ம்மின் திறை கொணர்ந்து’ என்று உலகு ஆண்டவர் இம்மையே
தம் மின்சுவை மடவாரைப் பிறர் கொள்ளத் தாம் விட்டு
வெம்மின் ஒளி வெயில் கானகம் போய்க் குமைதின்பர்கள்;
செம்மின் முடித் திரு மாலை விரைந்து அடி சேர்மினோ. –4-1-2
திறை கொணர்ந்து,Thirai konarnthu - செலுத்தவேண்டிய கப்பத்தைக் கொண்டுவந்து கட்டி
உய்ம்மின் என்று,Uymmin endru - பிழைத்துப்போங்கள் என்று கட்டளையிட்டுக்கொண்டு
உலகு,Ulagu - இவ்வுலகத்தை
ஆண்டவர் தாம்,Aandavar thaam - அரசுபுரிந்த பிரபுக்கள் தாம்
இம்மையே,Immaiye - இப்பிறப்பிலேயே
தம்,Tham - தங்களுடைய
இன் சுவை மடவாரை,In suvai madavaarai - பரமபோக்யைகளான ஸ்திரீகளை
பிறர்கொள்ள,Pirarkolla - அயலார் கவாந்துகொள்ளும்படி
விட்டு,Vittu - கையிழந்து
வெம் மின் ஒளி வெயில்,Vem min oli veyil - கொடி தாய் மின்னொளி பரக்கின்ற வெயிலையுடைய
கானகம் போய்,Kaanagam poyi - காட்டிலே சென்று
குமை தின்பர்கள்,Kumai dinbargal - திண்டாடுவர்கள்; (ஆதலால்)
செம் மின் முடி,Sem min mudi - செவ்விய காந்திபெற்ற திருமுடியையுடைய
திரு மாலை,Thiru maalai - திருமகள் கொழுநனை
விரைந்து,Viraindhu - விரைவாக
அடி சேர்மின்,Adi saermin - அடி பணியுங்கோள்.