Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3009 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3009திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (மற்றுள்ள அரசர்கள் தங்களை யடிபணிந்து நிற்க அவர்களை மதியாதே வாழ்ந்தவர்கள் அந்தச் செல்வக் கிடப்பை யிழந்து ஒருவரும் மதியாதபடி யாவர்களென்கிறார்.) 3
அடி சேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ
இடி சேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்
பொடி சேர் துகளாய்ப் போவர்கள் ஆதலில் நொக்கெனக்
கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ.–4-1-3
அடிசேர் முடியினர் ஆகி,Adiser mudiyinar aagi - தமது காலிலேபடிந்த கிரிடத்தையுடையவராகி
அரசர்கள் தாம்,Arasargal thaam - மஹாப்ரபுக்கள்
தொழ,Thozha - வணங்கும்படியாகவும்
இடி சேர் முரசங்கள்,Idi ser murasangal - இடியோடு ஒத்த பேரிகைகள்
முற்றத்து,Mutrathu - தம் தம் மாளிகைமுற்றத்திலே
இயம்ப,Iyamba - முழங்கும்படியாகவும்
இருந்தவர்,Irundhavar - வாழ்ந்தவர்கள்
பொடி சேர்துகள் ஆய் போவர்கள்,Podi serthugal aay povargal - பொடியோடு பொடியாய்த் தொலைந்து போவர்கள்;
ஆதலின்,Aadhalin - ஆதலால்
நொக்கென,Nokkena - விரைவாக
கடி சேர் துழாய் முடி,Kadi ser thulasi mudi - நறுமணம்மிக்க திருத்துழாய் மாலையணிந்த திருமுடியையுடைய
கண்ணன்,Kannan - கண்ணபிரானுடைய
கழல்கள்,Kazhalgal - திருவடிகளை
நினைமின்,Ninaimin - சிந்தியுங்கள்.