| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3009 | திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (மற்றுள்ள அரசர்கள் தங்களை யடிபணிந்து நிற்க அவர்களை மதியாதே வாழ்ந்தவர்கள் அந்தச் செல்வக் கிடப்பை யிழந்து ஒருவரும் மதியாதபடி யாவர்களென்கிறார்.) 3 | அடி சேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ இடி சேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர் பொடி சேர் துகளாய்ப் போவர்கள் ஆதலில் நொக்கெனக் கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ.–4-1-3 | அடிசேர் முடியினர் ஆகி,Adiser mudiyinar aagi - தமது காலிலேபடிந்த கிரிடத்தையுடையவராகி அரசர்கள் தாம்,Arasargal thaam - மஹாப்ரபுக்கள் தொழ,Thozha - வணங்கும்படியாகவும் இடி சேர் முரசங்கள்,Idi ser murasangal - இடியோடு ஒத்த பேரிகைகள் முற்றத்து,Mutrathu - தம் தம் மாளிகைமுற்றத்திலே இயம்ப,Iyamba - முழங்கும்படியாகவும் இருந்தவர்,Irundhavar - வாழ்ந்தவர்கள் பொடி சேர்துகள் ஆய் போவர்கள்,Podi serthugal aay povargal - பொடியோடு பொடியாய்த் தொலைந்து போவர்கள்; ஆதலின்,Aadhalin - ஆதலால் நொக்கென,Nokkena - விரைவாக கடி சேர் துழாய் முடி,Kadi ser thulasi mudi - நறுமணம்மிக்க திருத்துழாய் மாலையணிந்த திருமுடியையுடைய கண்ணன்,Kannan - கண்ணபிரானுடைய கழல்கள்,Kazhalgal - திருவடிகளை நினைமின்,Ninaimin - சிந்தியுங்கள். |