திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3010 | திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (மதிப்பு கெடுவதுமாத்திரமன்றிக்கே ஆயுளும் நிலைநில்லாதாகையாலே எம்பெருமான் திருவடிகளை வணங்குகளென்கிறார்.) 4 | நினைப்பான் புகில் கடல் எக்கலின் நுண்மணலின் பலர்
எனைத்தோர் யுகங்களும் இவ்வுலகு ஆண்டு கழிந்தவர்
மனைப்பால் மருங்கற மாய்தலல்லால் மற்றுக் கண்டிலம்
பனைத்தாள் மதகளிறட்டவன் பாதம் பணிமினோ.–4-1-4 | பதவுரை Show / Hideநினைப்பான் புகில்,Ninaippaan pugil - ஆலோசித்துப் பார்க்குமிடத்து எனைத்தோர் உலகங்களும்,Enaiththoor ulagangalum - அநேகயுகங்கள் இ உலகு ஆண்டு கழித்தவர்,I ulagu aandu kazhiththavar - இவ்வுலகத்தையாண்டு முடிந்து போனவர்கள் கடல் எக்கலில் நுண் மணலில் பலர்,Kadal ekkalil nun manalil palar - கடலில் எக்கலிடுகிற நுண்ணிய மணல்களை காட்டிலும் அதிகமான தொகையுள்ளவர்களாவர்;(எப்படிப்பட்ட பிரபுக்களும்) மனைப்பால்,Manaippaal - தாங்களிருந்த வீட்டின் இடம் மருங்கு அற,Marungu ara - சுற்றுப்பக்கங்களோடும்கூடத் தொலையும்படி மாய்தல் அல்லால்,Maaythal allaal - அழிந்து போவது தவிர மற்ற கண்டிலம்.,Matra kandilam - வேறொன்றும் பார்த்தோமில்லை; (ஆதலால்) பனை தாள்,Panai thaal - பனைமரம் போன்ற அடியையுடைய மத களிறு,Matha kaliru - (குவலயபீடமென்னும்) மதயானையை அட்டவன்,Attavan - கொன்றொழிந்த கண்ணபிரானுடைய பாதம்,Paadham - திருவடிகளை பணிமின்,Panimin - வணங்குங்கள். |