Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3012 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3012திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (ஸ்ருஷ்டி காலந்தொடங்கி இன்றளவும் செல்வம் குன்றுமே ஜீவித்தார் ஒருவரையும் கண்டிலோமென்கிறார்.) 6
வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்து
ஆழ்ந்தார் என்று அல்லால், அன்று முதல் இன்று அறுதியா
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை ; நிற்குறில்
ஆழ்ந்தார் கடற்பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ.–4-1-6
வாழ்ந்தார்கள் வாழ்ந்தது,Vaazhnthaarkal vaazhndhadhu - நன்றாக வாழ்ந்தவர்களென்று நினைக்கப்படுகிறவர்கள் வாழ்ந்த வாழ்வைப் பேசப்புகுந்தால்,
மாமழை மொக்குளின்,Maamalai mokkulilin - பெருமழையில் தோற்றும் நீர்க்குமிழிபோலே
மாய்ந்து மாய்ந்து,Maindhu maayndhu - அழிந்தழிந்து
ஆழ்ந்தார் என்று அல்லால்,Aazhnthar endru allaal - அதோகதியைபடைந்தனர் என்று சொல்லப்படுவது தவிர
அன்று முதல்,Andru mudhal - பரஹ்மஸ்டிருஷ்டி காலம் தொடங்கி
இன்று அறுதியா வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை,Indru arudhiya vaazhnthaarkal vaazhndhae nirpar enpathu illai - வாழ்ந்தவர்கள் ஒரு தன்மையாக வாழ்ந்தேயிருத்தல் கிடையாது;
நிற்குறில்,Nirguril - நிலைநின்ற வாழ்வடைய வேண்டில்
ஆழ்ந்து ஆர் கடல் பள்ளி,Aazhndhu aar kadal palli - ஆழமாகி நிறைந்த திருப்பாற்கடலில் துயில்கின்ற
அண்ணல்,Annal - ஸ்வாமிக்கு
அடியவர் ஆமின்,Adiyavar aamin - அடிமைப்பட்டிருங்கள்