திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3013 | திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (தேஹ போஷணத்திற்கு ஹேதுவான அன்னபானம் முதலிய போகமும் அநித்யமாகையாலே ஸகலகாரணபூதனான ஸர்வேச்வரனுடைய திருக்குணங்களை அநுஸந்தியுங்கோளென்கிறார்.) 7 | ஆமின் சுவை அவை ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்த பின்
தூமென் மொழி மடவார் இரக்கப் பின்னும் துற்றுவர்,
‘ஈமின் எமக்கு ஒரு துற்று’என்று இடறுவர் ; ஆதலின்,
கோமின் துழாய்முடி ஆதி அம் சோதி குணங்களே.–4-1-7 | பதவுரை Show / Hideஆம் இன்சுவை அவை அடிசில் ஆறோடு,Aam inchuvai avai adichil aarodu - பரமயோக்யமாய் ஷட்ரஸோபேதமான அன்னத்தை உண்டு ஆர்ந்தபின்,Undu aarindhapin - வயிறாரவுண்டு தீர்ந்த பின்பும் துர் மெல் மொழி மடவார் இரக்க,Thur mel mozhi madavaar irakka - வெகு அழகாகப் பேசவல்ல மாதர்கள் வேண்டிக்கொள்ள பின்னும்,Pinnum - மேலும் (அந்த வேண்டுகோளை மீறமுடியாமல்) துற்றுவார்,Thutruvaar - தின்றுகொண்டிருந்தவர்கள் எமக்கு ஒரு துற்று ஈ மின் என்று,Emmakku oru thutru ee min endru - (அப்படி யிருப்பதற்கான செல்வம் அழந்தவளவிலே) ‘எமக்கு ஒரு கவளம் கொடுங்கள்’ என்று சொல்லிக்கொண்டு இடறுவர்,Idaruvar - தடுமாறிச் செல்வர்கள்; ஆதலின்,Aadalin - ஆதலால் துழாய் முடி,Thuzhai mudi - திருத்துழாயையணிந்த திருமுடியையுடைய ஆதி அம் சோதி,Aathi am sodhi - ஸர்வேச்வரனுடைய குணங்கள்,Gunangal - திருக்குணங்களையே கோமின்,Komin - சேர்த்து அனுபவியுங்கள். |