Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3013 (2 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3013திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (தேஹ போஷணத்திற்கு ஹேதுவான அன்னபானம் முதலிய போகமும் அநித்யமாகையாலே ஸகலகாரணபூதனான ஸர்வேச்வரனுடைய திருக்குணங்களை அநுஸந்தியுங்கோளென்கிறார்.) 7
ஆமின் சுவை அவை ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்த பின்
தூமென் மொழி மடவார் இரக்கப் பின்னும் துற்றுவர்,
‘ஈமின் எமக்கு ஒரு துற்று’என்று இடறுவர் ; ஆதலின்,
கோமின் துழாய்முடி ஆதி அம் சோதி குணங்களே.–4-1-7
ஆம் இன்சுவை அவை அடிசில் ஆறோடு,Aam inchuvai avai adichil aarodu - பரமயோக்யமாய் ஷட்ரஸோபேதமான அன்னத்தை
உண்டு ஆர்ந்தபின்,Undu aarindhapin - வயிறாரவுண்டு தீர்ந்த பின்பும்
துர் மெல் மொழி மடவார் இரக்க,Thur mel mozhi madavaar irakka - வெகு அழகாகப் பேசவல்ல மாதர்கள் வேண்டிக்கொள்ள
பின்னும்,Pinnum - மேலும் (அந்த வேண்டுகோளை மீறமுடியாமல்)
துற்றுவார்,Thutruvaar - தின்றுகொண்டிருந்தவர்கள்
எமக்கு ஒரு துற்று ஈ மின் என்று,Emmakku oru thutru ee min endru - (அப்படி யிருப்பதற்கான செல்வம் அழந்தவளவிலே) ‘எமக்கு ஒரு கவளம் கொடுங்கள்’ என்று சொல்லிக்கொண்டு
இடறுவர்,Idaruvar - தடுமாறிச் செல்வர்கள்;
ஆதலின்,Aadalin - ஆதலால்
துழாய் முடி,Thuzhai mudi - திருத்துழாயையணிந்த திருமுடியையுடைய
ஆதி அம் சோதி,Aathi am sodhi - ஸர்வேச்வரனுடைய
குணங்கள்,Gunangal - திருக்குணங்களையே
கோமின்,Komin - சேர்த்து அனுபவியுங்கள்.
3013திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) (ஆழ்வாருடைய ஆர்த்திதீரும்படி பரமபதத்திலிருப்பைக காட்டிக் கொடுக்க, அதுகண்டு தாம் களித்தமை கூறுகின்றது இப்பாசுரம்.) 9
கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகை செய்து,
ஆட்டுதி நீ; அரவணையாய்! அடியேனும் அஃது அறிவன்;
வேட்கை எலாம் விடுத்து எனை உன் திருவடியே சுமந்து உழலக்
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே.–4-9-9
அரவு அணையாய்,Aravu anaiyaay - சேஷசாயியான பெருமானே!,
நீ,Nee - நீ
நின் குரை கழல்கள்,Nin kurai kazhalkal - (அபிமதரான சிலரை) ஆபரணத்வநி பொருந்திய உனது திருவடிகளிலே
கூட்டுதி,Kootuthi - சேர்த்துக் கொள்ளுகிறாய்;
இமையோரும்,Imayorum - (திருவுள்ள மில்லையாகில்) (ஞானசக்திகள் நிறைந்திருக்கப் பெற்ற) தேவர்களும்
தொழா வகை செய்து,Thoza vakai seydhu - கண்டு அநுபவியாதபடி பண்ணி
ஆட்டுதி,Aattuthi - அலைக்கின்றாய்;
அஃது,Ahdhu - இப்படி எளியனாயும் அரியனாயுமிருக்குந் தன்மையை
அடியேனும்,Adiyenum - நானும்
அறிவன்,Arivan - அறிந்தேயிருக்கின்றேன்;
என்னை,Ennai - எனக்குண்டான
வேட்கை எல்லாம் விடுத்து,Vedkai ellaam viduthu - விஷயாந்தர விருப்பங்களெல்லாவற்றையும் கழித்து
உன் திரு அடியே,Un thiru ade - உனது திருவடிகளையே
சுமந்து உழல,Sumanthu uzhal - நான் தலையால் சுமந்து திரியும்படி
கூட்ட அரிய திரு அடிக்கண்,Kootu ariya thiru adikkan - துர்லபமான திருவடிகளிலே
கூட்டினை,Koottinai - சேர்த்துக் கொண்டாய்;
நான் கண்டேன்,Naan kandeen - இதை ப்ரத்யக்ஷமாக அநுபவித்தேன்