திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3014 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3014திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (அரசாட்சி புரிவதாகிய போகமும் எம்பெருமானருளாலன்றிக் கிடைக்கமாட்டாதென்றும், அங்ஙனமே கிடைக்கின்ற அதுதானும் நிலை நில்லாததென்றுமருளிச் செய்கிறார்.) 8
குணங்கொள் நிறை புகழ் மன்னர் கொடைக்கடன் பூண்டிருந்து இணங்கி உலகுடன் ஆக்கிலும், ஆங்கு அவனை இல்லார் மணங்கொண்ட போகத்து மன்னியும் மீள்வர்கள்; மீள்வு இல்லை; பணங்கொள் அரவணையான் திரு நாமம் படிமினோ.–4-1-8
பதவுரை Show / Hide
குணம் கொள்,Gunam kol - குணசாலிகளும்
நிறை புகழ்,Nirai pugal - நிறைந்த கீர்த்தியை யுடையருமான
மன்னர்,Mannar - ராஜகுமாரர்களாய்
கொடை கடன் பூண்டு இருந்து,Kodai kadhan poontu irundhu - ஔதார்யத்தைக் கடமையாக ஏறிட்டுக் கொண்டிருந்து
இணங்கி உலகு உடன் ஆக்கிலும்,Inanggi ulagu udan aakkilum - உலகங்களை ஸ்வாதீனப்படுத்தி ஆண்டாலும்
ஆங்கு,Aangu - அவ்விஷயத்தில்
அவனை இல்லார்,Avani illaar - அந்த ஸர்வேசுரனை ஆச்ரயித்தவில்லாதவர்கள்
மணம் கொண்ட போகத்து,Manam konda bhogathu - மிகநல்ல போகங்களில்
மன்னியும்,Manniyum - பொருந்தியிருந்தாலும்.
மீனவர்கள்,Meenavargal - அதோகதியடைவர்கள்;
பணம் கொள்,Panam kol - படமெடுத்தாடுகின்ற
அரவு,Aravu - ஆதிசேஷனை
அணையான்,Anaiyaan - படுக்கையாகவுடைய ஸர்வேசுரனது
திரு நாமம்,Thiru naamam - திருநாமங்களை
படிமின்,Padimin - படியுங்கள்; (படித்தால்)
மீள்வு இல்லை,Meelvu illai - மீட்சியில்லாத பெருஞ்செல்வம் கிடைக்கும்.