திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3014 | திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (அரசாட்சி புரிவதாகிய போகமும் எம்பெருமானருளாலன்றிக் கிடைக்கமாட்டாதென்றும், அங்ஙனமே கிடைக்கின்ற அதுதானும் நிலை நில்லாததென்றுமருளிச் செய்கிறார்.) 8 | குணங்கொள் நிறை புகழ் மன்னர் கொடைக்கடன் பூண்டிருந்து
இணங்கி உலகுடன் ஆக்கிலும், ஆங்கு அவனை இல்லார்
மணங்கொண்ட போகத்து மன்னியும் மீள்வர்கள்; மீள்வு இல்லை;
பணங்கொள் அரவணையான் திரு நாமம் படிமினோ.–4-1-8 | பதவுரை Show / Hideகுணம் கொள்,Gunam kol - குணசாலிகளும் நிறை புகழ்,Nirai pugal - நிறைந்த கீர்த்தியை யுடையருமான மன்னர்,Mannar - ராஜகுமாரர்களாய் கொடை கடன் பூண்டு இருந்து,Kodai kadhan poontu irundhu - ஔதார்யத்தைக் கடமையாக ஏறிட்டுக் கொண்டிருந்து இணங்கி உலகு உடன் ஆக்கிலும்,Inanggi ulagu udan aakkilum - உலகங்களை ஸ்வாதீனப்படுத்தி ஆண்டாலும் ஆங்கு,Aangu - அவ்விஷயத்தில் அவனை இல்லார்,Avani illaar - அந்த ஸர்வேசுரனை ஆச்ரயித்தவில்லாதவர்கள் மணம் கொண்ட போகத்து,Manam konda bhogathu - மிகநல்ல போகங்களில் மன்னியும்,Manniyum - பொருந்தியிருந்தாலும். மீனவர்கள்,Meenavargal - அதோகதியடைவர்கள்; பணம் கொள்,Panam kol - படமெடுத்தாடுகின்ற அரவு,Aravu - ஆதிசேஷனை அணையான்,Anaiyaan - படுக்கையாகவுடைய ஸர்வேசுரனது திரு நாமம்,Thiru naamam - திருநாமங்களை படிமின்,Padimin - படியுங்கள்; (படித்தால்) மீள்வு இல்லை,Meelvu illai - மீட்சியில்லாத பெருஞ்செல்வம் கிடைக்கும். |