| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3014 | திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (அரசாட்சி புரிவதாகிய போகமும் எம்பெருமானருளாலன்றிக் கிடைக்கமாட்டாதென்றும், அங்ஙனமே கிடைக்கின்ற அதுதானும் நிலை நில்லாததென்றுமருளிச் செய்கிறார்.) 8 | குணங்கொள் நிறை புகழ் மன்னர் கொடைக்கடன் பூண்டிருந்து இணங்கி உலகுடன் ஆக்கிலும், ஆங்கு அவனை இல்லார் மணங்கொண்ட போகத்து மன்னியும் மீள்வர்கள்; மீள்வு இல்லை; பணங்கொள் அரவணையான் திரு நாமம் படிமினோ.–4-1-8 | குணம் கொள்,Gunam kol - குணசாலிகளும் நிறை புகழ்,Nirai pugal - நிறைந்த கீர்த்தியை யுடையருமான மன்னர்,Mannar - ராஜகுமாரர்களாய் கொடை கடன் பூண்டு இருந்து,Kodai kadhan poontu irundhu - ஔதார்யத்தைக் கடமையாக ஏறிட்டுக் கொண்டிருந்து இணங்கி உலகு உடன் ஆக்கிலும்,Inanggi ulagu udan aakkilum - உலகங்களை ஸ்வாதீனப்படுத்தி ஆண்டாலும் ஆங்கு,Aangu - அவ்விஷயத்தில் அவனை இல்லார்,Avani illaar - அந்த ஸர்வேசுரனை ஆச்ரயித்தவில்லாதவர்கள் மணம் கொண்ட போகத்து,Manam konda bhogathu - மிகநல்ல போகங்களில் மன்னியும்,Manniyum - பொருந்தியிருந்தாலும். மீனவர்கள்,Meenavargal - அதோகதியடைவர்கள்; பணம் கொள்,Panam kol - படமெடுத்தாடுகின்ற அரவு,Aravu - ஆதிசேஷனை அணையான்,Anaiyaan - படுக்கையாகவுடைய ஸர்வேசுரனது திரு நாமம்,Thiru naamam - திருநாமங்களை படிமின்,Padimin - படியுங்கள்; (படித்தால்) மீள்வு இல்லை,Meelvu illai - மீட்சியில்லாத பெருஞ்செல்வம் கிடைக்கும். |
| 3014 | திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) (கீழ்ப் பாசுரத்தில் ப்ரஸங்கித்த பேற்றை உகப்பின் மிகுதியாலே இன்னமும் பன்னி யுரைக்கின்றாரிதில்.) 10 | கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி கண்ட இன்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம், ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப, கண்ட சதிர் கண்டொழிந்தேன்; அடைந்தேன் உன் திருவடியே.–4-9-10 | ஒண் தொடியாள்,On thodiyal - அழகிய கைகளையுடையளாகிய திரு மகளும்,Thiru magalum - பெரிய பிராட்டியாரும் நீயுமே,Neeyume - அவளுடைய நாயகனான நீயுமே நிலா நிற்ப கண்ட சதிர்,Nila nirpa kanda sadhir - களித்து வாழ்கிற அழகிய இருப்பை கண்டு,Kandu - இப்போது காணப்பெற்று கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி கண்ட இன்பம்,Kandu kettu urru mondu undu uzhalum aingaruvi kanda inbam - காண்பது கேட்பது தொடுவது மோருவது உட்கொள்ளுவதாகிற வேலைகளைச் செய்துகொண்டு அலைகின்ற பஞ்சேந்திரியங்களுக்கும் வாய்த்த விஷய சுகங்களையும் தெரிவு அரிய அளவு இல்லா சிறு இன்பம்,Therivu ariya alavu illa siru inbam - கைவல்ய ஸூகத்தையும் ஒழிந்தேன்,Ozhindhen - தவிர்க்கப் பெற்றேன்; உன் திரு அடியே அடைந்தேன்,Un thiru ade adaindhen - உனது திருவடிகளை அடையவும் பெற்றேன். |