திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 3015 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3015திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (கீழ்ப்பாசுரங்களில் இஹலோகஸுகங்களின் ஹேயத்வத்தை அருளிச்செய்துவந்தார். இனி இரண்டு பாசுரங்களில், ஸ்வர்க்கலோக போகத்தினுடையவும் ஹேயத்வத்தையருளிச் செய்வாராய், இப்பாட்டில் ஸ்வர்க்க தவம்புரியுங்காலை நிலையை ஒன்றரையடியாலருளிச் செய்கிறார்.) 9
படிமன்னு பல்கலன் பற்றோடு அறுத்து,ஐம் புலன் வென்று, செடிமன்னு காயம் செற்றார்களும், ஆங்கு அவனை இல்லார் குடிமன்னும் இன் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள்; மீள்வு இல்லை; கொடிமன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ. –4-1-9
பதவுரை Show / Hide
படி மன்னு,Padi mannu - பரம்பரையாய் வருகின்ற
பல் கலன்,Pal kalan - பலபல ஆபரணங்களையும்
பற்றோடு அறுத்து,Patroodu aruthu - ஸவாஸநமாகவிட்டவர்களாய்
ஐம்புலன்,Aimbulan - பஞ்சேந்திரியங்களையும்
வென்று,Vendru - வசப்படுத்தினவர்களாய்
செடி மன்னு,Sedi mannu - தூறுமண்டிக்கிடக்கும்படியாக
காயம்,Kayam - சரீரத்தை
செற்றார்களும்,Settraarkalum - தவவிரதங்களால் வெறுக்கின்றவர்களும்
ஆங்கு,Aangu - அவ்விஷயத்தில்
அவனை இல்லார்,Avani illaar - அந்த எம்பெருமபானை ஆச்ரயித்தலில்லாதவர்கள்
குடி மன்னும்,Kudi mannum - வெகுகாலம் நிலைபெற்றிருக்கும்படியான
இன் சுவர்க்கம்,In suvargkam - இனிமையான சுவர்க்கத்தை
எய்தியும் மீன்வர்கள்,Eydhiyum meenvargal - அடைந்தும் திரும்புவர்கள்; (ஆதலால்)
கொடிமன்னு புள் உடை,Kodimannu pul udai - கருடத்வஜனான
அண்ணல்,Annal - ஸ்வாமியினுடைய
கழல்கள்,Kazhalkal - திருவடிகளை
குறுகுமின்,Kurugumin - கிட்டுங்கள்; (அப்படியாயின்)
மீள்வு இல்லை,Meelvu illai - என்று மீட்சியில்லாத பெருஞ் செல்வமுண்டாகும்.