| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3015 | திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (கீழ்ப்பாசுரங்களில் இஹலோகஸுகங்களின் ஹேயத்வத்தை அருளிச்செய்துவந்தார். இனி இரண்டு பாசுரங்களில், ஸ்வர்க்கலோக போகத்தினுடையவும் ஹேயத்வத்தையருளிச் செய்வாராய், இப்பாட்டில் ஸ்வர்க்க தவம்புரியுங்காலை நிலையை ஒன்றரையடியாலருளிச் செய்கிறார்.) 9 | படிமன்னு பல்கலன் பற்றோடு அறுத்து,ஐம் புலன் வென்று, செடிமன்னு காயம் செற்றார்களும், ஆங்கு அவனை இல்லார் குடிமன்னும் இன் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள்; மீள்வு இல்லை; கொடிமன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ. –4-1-9 | படி மன்னு,Padi mannu - பரம்பரையாய் வருகின்ற பல் கலன்,Pal kalan - பலபல ஆபரணங்களையும் பற்றோடு அறுத்து,Patroodu aruthu - ஸவாஸநமாகவிட்டவர்களாய் ஐம்புலன்,Aimbulan - பஞ்சேந்திரியங்களையும் வென்று,Vendru - வசப்படுத்தினவர்களாய் செடி மன்னு,Sedi mannu - தூறுமண்டிக்கிடக்கும்படியாக காயம்,Kayam - சரீரத்தை செற்றார்களும்,Settraarkalum - தவவிரதங்களால் வெறுக்கின்றவர்களும் ஆங்கு,Aangu - அவ்விஷயத்தில் அவனை இல்லார்,Avani illaar - அந்த எம்பெருமபானை ஆச்ரயித்தலில்லாதவர்கள் குடி மன்னும்,Kudi mannum - வெகுகாலம் நிலைபெற்றிருக்கும்படியான இன் சுவர்க்கம்,In suvargkam - இனிமையான சுவர்க்கத்தை எய்தியும் மீன்வர்கள்,Eydhiyum meenvargal - அடைந்தும் திரும்புவர்கள்; (ஆதலால்) கொடிமன்னு புள் உடை,Kodimannu pul udai - கருடத்வஜனான அண்ணல்,Annal - ஸ்வாமியினுடைய கழல்கள்,Kazhalkal - திருவடிகளை குறுகுமின்,Kurugumin - கிட்டுங்கள்; (அப்படியாயின்) மீள்வு இல்லை,Meelvu illai - என்று மீட்சியில்லாத பெருஞ் செல்வமுண்டாகும். |
| 3015 | திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) (இத்திருவாய்மொழியானது, தன்னைக் தற்பவர்களை அவன் திருவடிகளோடே சேர்விக்கும் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது.) 11 | திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரைத் திருவடி சேர்வது கருதிச் செழுங் குருகூர்ச் சடகோபன் திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும் திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே.–4-9-11 | திரு அடியை,Thiru adiyai - ஸர்வாமியாய் காரணனை,Kaarananai - நாராயணானாய் கேசவனை,Kaeshavanai - பரஞ்சோதியாயிருக்கிற எம்பெருமானை திரு அடி சேர்வது கருதி,Thiru adi saervadhu karuthi - கிட்டியநுபவிக்க விரும்பி செழு குருகூர் சடகோபன்;,Sezhu kurukoor sadagopan - செழு குருகூர் சடகோபன்; திரு அடி மேல்,Thiru adi mel - அவனது திருவடிகளின் மீது உரைத்த,Uraitha - அருளிச்செய்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்;,Thamil aayiraththul ippattum - தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்; திரு அடியே,Thiru adiye - அந்தத் திருவடிகளையே அடைவிக்கும்,Adaivikkum - அடையப்பண்ணும்; திரு அடி சேர்ந்து,Thiru adi serndhu - (ஆதலால், நீங்கள்) அந்தத் திருவடிகளைக் கிட்டி ஒன்றுமின்,Ondrumin - பொருந்தியிருக்கப் பாருங்கள் |