Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3015 (2 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3015திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (கீழ்ப்பாசுரங்களில் இஹலோகஸுகங்களின் ஹேயத்வத்தை அருளிச்செய்துவந்தார். இனி இரண்டு பாசுரங்களில், ஸ்வர்க்கலோக போகத்தினுடையவும் ஹேயத்வத்தையருளிச் செய்வாராய், இப்பாட்டில் ஸ்வர்க்க தவம்புரியுங்காலை நிலையை ஒன்றரையடியாலருளிச் செய்கிறார்.) 9
படிமன்னு பல்கலன் பற்றோடு அறுத்து,ஐம் புலன் வென்று,
செடிமன்னு காயம் செற்றார்களும், ஆங்கு அவனை இல்லார்
குடிமன்னும் இன் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள்; மீள்வு இல்லை;
கொடிமன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ. –4-1-9
படி மன்னு,Padi mannu - பரம்பரையாய் வருகின்ற
பல் கலன்,Pal kalan - பலபல ஆபரணங்களையும்
பற்றோடு அறுத்து,Patroodu aruthu - ஸவாஸநமாகவிட்டவர்களாய்
ஐம்புலன்,Aimbulan - பஞ்சேந்திரியங்களையும்
வென்று,Vendru - வசப்படுத்தினவர்களாய்
செடி மன்னு,Sedi mannu - தூறுமண்டிக்கிடக்கும்படியாக
காயம்,Kayam - சரீரத்தை
செற்றார்களும்,Settraarkalum - தவவிரதங்களால் வெறுக்கின்றவர்களும்
ஆங்கு,Aangu - அவ்விஷயத்தில்
அவனை இல்லார்,Avani illaar - அந்த எம்பெருமபானை ஆச்ரயித்தலில்லாதவர்கள்
குடி மன்னும்,Kudi mannum - வெகுகாலம் நிலைபெற்றிருக்கும்படியான
இன் சுவர்க்கம்,In suvargkam - இனிமையான சுவர்க்கத்தை
எய்தியும் மீன்வர்கள்,Eydhiyum meenvargal - அடைந்தும் திரும்புவர்கள்; (ஆதலால்)
கொடிமன்னு புள் உடை,Kodimannu pul udai - கருடத்வஜனான
அண்ணல்,Annal - ஸ்வாமியினுடைய
கழல்கள்,Kazhalkal - திருவடிகளை
குறுகுமின்,Kurugumin - கிட்டுங்கள்; (அப்படியாயின்)
மீள்வு இல்லை,Meelvu illai - என்று மீட்சியில்லாத பெருஞ் செல்வமுண்டாகும்.
3015திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) (இத்திருவாய்மொழியானது, தன்னைக் தற்பவர்களை அவன் திருவடிகளோடே சேர்விக்கும் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது.) 11
திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரைத்
திருவடி சேர்வது கருதிச் செழுங் குருகூர்ச் சடகோபன்
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே.–4-9-11
திரு அடியை,Thiru adiyai - ஸர்வாமியாய்
காரணனை,Kaarananai - நாராயணானாய்
கேசவனை,Kaeshavanai - பரஞ்சோதியாயிருக்கிற எம்பெருமானை
திரு அடி சேர்வது கருதி,Thiru adi saervadhu karuthi - கிட்டியநுபவிக்க விரும்பி
செழு குருகூர் சடகோபன்;,Sezhu kurukoor sadagopan - செழு குருகூர் சடகோபன்;
திரு அடி மேல்,Thiru adi mel - அவனது திருவடிகளின் மீது
உரைத்த,Uraitha - அருளிச்செய்த
தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்;,Thamil aayiraththul ippattum - தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்;
திரு அடியே,Thiru adiye - அந்தத் திருவடிகளையே
அடைவிக்கும்,Adaivikkum - அடையப்பண்ணும்;
திரு அடி சேர்ந்து,Thiru adi serndhu - (ஆதலால், நீங்கள்) அந்தத் திருவடிகளைக் கிட்டி
ஒன்றுமின்,Ondrumin - பொருந்தியிருக்கப் பாருங்கள்