திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3016 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3016திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (கீழ்ப்பாட்டிற்சொன்ன சுவர்க்கம்போலே அஸ்திரமல்லாமல் நிலை நின்ற மோக்ஷமான கைவல்யத்திலும் ஊற்றத்தைவிட்டு பகவத் கைங்கர்யத்தையே பரம ப்ராப்யமாகப் பற்றுங்களென்கிறார்.) 10
குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட இறுகல் இறப்பெனும் ஞானிக்கும் அப்பயன் இல்லையேல், சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்; பின்னும் வீடு இல்லை, மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடு அஃதே.–4-1-10
பதவுரை Show / Hide
குறுக,Kuruga - பட்டிமேயாதபடி மனத்தைக் குறுக்கி
உணர்வத்தொடு,Unarvathodu - ஜ்ஞாநஸ்வரூபனான ஆத்மாவோடு
மிக நோக்கி,Miga nokki - நன்றாகச் சேர்த்து (ஆத்மஸாகூஷாத்காரித்தைப்பண்ணி)
எல்லாம் விட்ட,Ellaam vitta - (ஜச்வர்யம், பகவதநுபவம் முதலிய) எல்லாவற்றையும் வெறுத்தவனாய்
இறுகல் இறப்பு என்னும்,Irukal irapu ennum - ஸங்கோச மோக்ஷமாகிய கை வல்யமோக்ஷத்தில் விருப்பங்கொண்டவனான
ஞானிக்கும்,Gnaanikkum - ஜ்ஞாநயோக நிஷ்டனுக்கும்
அப்பயன் இல்லை ஏல்,Appayann illai ael - அந்த பகவதுபாஸநம் இல்லையாகில்
சிறுக,Siruga - அற்பமாக
நினைவது,Ninaivathu - நினைப்பதற்குறுப்பான
ஒர்பாசம் உண்டாம்,Orpasham undaam - ஒரு பந்தம் உண்டாகும்
பின்னும்,Pinnnum - அதற்குமேலே
வீடு இல்லை,Veedu illai - அந்தக் கைவல்ய மோக்ஷதட ஒரு நாளும் விட்டு நிங்குவதன்று;
மறுகல் இல்,Marugal ill - ஹேயப்ரதிபடனான
ஈசனை,Eesanai - எம்பெருமானை
பற்றி,Partri - ஆச்ரயித்து
விடாவிடில்,Vidaavidil - நீங்காவிடில்
அஃதே வீடு,Akdhe veedu - அதுவே பரமபுருஷார்த்தம்