திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 3017 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3017திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (துயரங்கள் தீர்ந்து ஆத்மோஜ்ஜூவநம் பெறுவதே இத்திருவாய்மொழி கற்பதற்குப் பலன் என்று பயனுரைத்துத் தலைகாட்டுகிறார்.) 11
அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல் கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்கோலத்து ஆயிரம் சீர்த்தொடைப் பாடல் இவை பத்தும் அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே.–4-1-11
பதவுரை Show / Hide
உய்யப் புகும் ஆறு,Uyyap pugum aaru - உஜ்ஜீவநோபாயம்
அஃதே என்று,Akdhe endru - திருநாராணன் தாள்களேயென்று அறுதியிட்டு
கண்ணன்,Kannan - எம்பெருமானுடைய
கழல்கள் மேல்,Kazhalkal mel - திருவடிகள் விஷயமாக
கொய் பூ,Koi poo - திருவடிகள் விஷயமாக
பொழில் சூழ்,Pozhil soozh - கொய்வதற்குரிய பூக்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட
குருகூர்,Kurugoor - திருநகரிக்குத் தவைரான
சடகோபன்,Sadagopan - ஆழ்வாருடைய
குற்றேவல்,Kutreval - வாசிக கைங்கர்ய ரூபமாயும்
செய் கோலத்து,Sei kolathu - ஸர்வாலங்கார ஸம்பந்தமாயுமிருக்கிற
ஆயிரம்,Aayiram - ஆயிரந்தொகையுள்ள
சீர் தொடை பாடல்,Seer thodai paadal - திருக்குணங்களை யிட்டுத் தொடுத்த மாலை போன்ற இப்பாடலில்
இவை பத்தும்,Ivai pathum - இப்பத்துப் பாசுரங்களையும்
அஃகாமல்,Akhamal - குறைவின்றி
கற்பவர்,Karppavar - ஓதுமவர்கள்
ஆழ் துயர் போய்,Aazh thuyar poi - ஆழ்ந்த துயர் நீங்கப்பெற்ற
உய்யற்பாலர்,Uyyar paalar - உஜ்ஜூவிக்குந் தன்மையை யுடையராவர்.