Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3018 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3018திருவாய்மொழி || (4-2–பாலனாய் ஏழுலகுண்டு) (காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்) (பண்டு ஆவிலையில் பள்ளிகொண்ட எம்பெருமானுடைய திருவடிகளிலே சாத்தின திருத்துழாயை இப்போது பெறவேணுமென்று என் மகள் (பாரங்குச நாயகி) ஆசைப்படுகின்றாளென்று திருத்தாயார் கூறுகின்றாள்.) 1
பாலன் ஆய், ஏழ் உலகு உண்டு, பரிவு இன்றி
ஆலிலை அன்ன வசம் செயும் அண்ணலார்
தாளிணை மேல் அணி தண் அம் துழாய் என்றே
மாலுமால் வல் வினையேன் மட வல்லியே.–4-2-1
பாலன் ஆய்,Balan aay - சிறு குழவியாகி
பரிவு இன்றி,Parivu indri - அநாயாஸமாக
ஏழ் உலகு உண்டு,Ezhulagu undu - ஏழுலகங்களையும் திருவயிற்றிலே வைத்து
ஆல்இலை,Aalilai - ஆலந்தளிரிலே
அன்னவசம் செய்யும்,Annavasam seyyum - நித்திரை செய்தருளின
அண்ணலார்,Annalaar - ஸ்வாமியினுடைய
தாள் இணை மேல்,Thaal inai mel - உபய பாதங்களின் மீது
அணி,Ani - சாத்தப்பெற்ற
தண் அம்,Than am - குளிர்ந்தழகிய
துழாய் என்றே,Thuzai endre - திருத்துழாய்மாலை யென்றே வாய் வெருவிக்கொண்டு
வல் வினையேன் மட வல்லி,Val vinaiyen mada valli - வலிய பாபத்தைப் பண்ணின என்னுடைய இளங்கொடி போன்ற மகள்
மாலும்,Maalum - வ்யாமோஹிக்கின்றாள்;
ஆல்,Aal - அந்தோ!