| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3018 | திருவாய்மொழி || (4-2–பாலனாய் ஏழுலகுண்டு) (காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்) (பண்டு ஆவிலையில் பள்ளிகொண்ட எம்பெருமானுடைய திருவடிகளிலே சாத்தின திருத்துழாயை இப்போது பெறவேணுமென்று என் மகள் (பாரங்குச நாயகி) ஆசைப்படுகின்றாளென்று திருத்தாயார் கூறுகின்றாள்.) 1 | பாலன் ஆய், ஏழ் உலகு உண்டு, பரிவு இன்றி ஆலிலை அன்ன வசம் செயும் அண்ணலார் தாளிணை மேல் அணி தண் அம் துழாய் என்றே மாலுமால் வல் வினையேன் மட வல்லியே.–4-2-1 | பாலன் ஆய்,Balan aay - சிறு குழவியாகி பரிவு இன்றி,Parivu indri - அநாயாஸமாக ஏழ் உலகு உண்டு,Ezhulagu undu - ஏழுலகங்களையும் திருவயிற்றிலே வைத்து ஆல்இலை,Aalilai - ஆலந்தளிரிலே அன்னவசம் செய்யும்,Annavasam seyyum - நித்திரை செய்தருளின அண்ணலார்,Annalaar - ஸ்வாமியினுடைய தாள் இணை மேல்,Thaal inai mel - உபய பாதங்களின் மீது அணி,Ani - சாத்தப்பெற்ற தண் அம்,Than am - குளிர்ந்தழகிய துழாய் என்றே,Thuzai endre - திருத்துழாய்மாலை யென்றே வாய் வெருவிக்கொண்டு வல் வினையேன் மட வல்லி,Val vinaiyen mada valli - வலிய பாபத்தைப் பண்ணின என்னுடைய இளங்கொடி போன்ற மகள் மாலும்,Maalum - வ்யாமோஹிக்கின்றாள்; ஆல்,Aal - அந்தோ! |