Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3019 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3019திருவாய்மொழி || (4-2–பாலனாய் ஏழுலகுண்டு) (காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்) (கண்ணபிரான் ஆய்ச்சிகளோடு கூடிக் குரவை கோத்தகாலத்துச் திருவடியிலணிந்து கொண்டிருந்த திருத்துழாய் மாலையை என்மகள் வாய் வெருவுகின்றாளென்கிறாள்.) 2
வல்லி சேர் நுண்ணிடை ஆய்ச்சியர் தம்மொடும்
கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர்
நல்லடி மேல் அணி நாறு துழாய் என்றே
சொல்லுமால் சூழ்வினை யாட்டியேன் பாவையே.–4-2-2
சூழ் வினையாட்டினேன்,Soozh vinaiyaattineen - மிகுந்த தீவினையை யுடையனோகிய என்னுடைய
பாவை,Paavai - பதுமை போன்ற பெண்ணானவள்
வல்லி சேர்,Valli ser - கொடி போன்று
நுண்,Nun - நுட்பமான
இடை,Idai - இடுப்பையுடைய
ஆய்ச்சியர்தம்மொடும்,Aaychiyarthammodum - கோபிமார்களோடுகூடி
கொல்லைமை செய்து,Kollaimai seydhu - வரம்புகடந்த செயல்களைச் செய்து
குரவை பிணைந்தவர்,Kuravai pinaindhavar - ராஸக்ரீடை செய்த கண்ணபிரானுடைய
நல் அடி மேல் அணி;,Nal adi mel ani; - அழகிய திருவடிகளின் மீது சாத்தின
நாறு துழாய் என்றே,Naru thuzhai endre - நறுமணம்மிக்க திருத்துழாயென்றே
சொல்லும்,Sollum - சொல்லுகின்றாள்;
ஆல்,Aal - அந்தோ!