Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3020 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3020திருவாய்மொழி || (4-2–பாலனாய் ஏழுலகுண்டு) (காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்) (உலகளந்தருளின எம்பெருமான் திருவடிகளில் திருத்துழாயை என் மகள் ஆசைப்படாநின்றாளென்கிறாள். மூலத்தில் “தேவர்கள் மாமுனிவரிறைஞ்சநின்ற சேவடி” என்றிவ்வளவேயுள்ளது: “உலகளந்த திருவடி” என்று வ்யக்தமாக இல்லை; “பாற்கடல் சோந்த பரமனுடைய அழகிய திருவடிகளிலே அணிந்த செம்பொற்றுழாயென்று இவள் கூப்பிடா நிற்குமென்கிறாள்” என்றருளிச்செய்தார் ஆறாயிரப்படியில் பிள்ளான். மற்ற வியாக்கியானங்களில்-“உலகளந்தருளனவன்; திருவடிகளிற் திருத்துழாயை ஆசைப்படாநின்றாளென்கிறாள்” என்றுள்ளது.) 3
பாவியல் வேத நன் மாலை பல கொண்டு,
தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற
சேவடி மேல் அணி செம் பொன் துழாய் என்றே
கூவுமால் கோள்வினை யாட்டியேன் கோதையே.–4-2-3
பா இயல் வேதம்,Paa iyal vedham - சந்தஸ்ஸூக்கள் பொருந்திய வேதங்களாகிற
நல் பல மாலை கொண்டு,Nal pala maalai kondu - திவ்யமான பல மாலைகளைக் கொண்டு
தேவர்கள்,Devargal - தேவர்களும்
மா முனிவர்,Maa munivar - மஹா முனிகளும்
இறைஞ்ச நின்ற,Irainja ninra - ஆராதிக்கும்படி (உலகையளந்து) நின்ற
சே அடி மேல்,Se adi mel - திருவடிகளின் மேலே
அணி,Ani - அணிந்த
செம் பொன் துழாய் என்றே,Sem pon Thuzhai endre - செவ்விதமாய் விரும்பத்தக்கதான திருத்துழா யென்றே
கூவும்,Koovum - கூப்பிடா நின்றாள் (யாரென்னில்)
கோள் வினையாட்டியேன்,Kol vinaiyaattiyen - வலிய பாபத்தைப் பண்ணினவளான என்னுடைய
கோதை,Kodhai - சிறந்த கூந்தலையுடையளான பெண்பிள்ளை