| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3021 | திருவாய்மொழி || (4-2–பாலனாய் ஏழுலகுண்டு) (காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்) (திருநாட்டி லெழுந்தருளி யிருக்கிற பராத்பரனுடைய திருவடிகளில் திருத்துழாயை என் மகள் ஆசைப்படாநின்றாளென்கிறாள்.) 4 | கோது இல் வண்புகழ் கொண்டு, சமயிகள் பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான், பரன் பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே ஓதுமால்; ஊழ் வினையேன் தடந் தோளியே.–4-2-4 | ஊழ்வினையேன்,oozhvinaiyen - பெரும்பாவத்தை யுடையேனாகிற எனது தட தோளி,thada tholi - பெருந் தோள்களை யுடையளான பெண் பிள்ளை சமயிகள்,samayigal - சமயவாதிகள் கோது இல்,kodhu il - குற்றமற்ற வண் புகழ் கொண்டு,van pugazh kondu - விலக்ஷணமான குணங்களைக் கொண்டு பேதங்கள் சொல்லி,pethangal solli - தாம்தாம் பற்றிய குணங்களின் ஏற்றங்களைச் சொல்லி பிதற்றும் பிரான்,pitharum piraan - பிதற்றும்படியாகவுள்ள ஸ்வாமியான பரன்,paran - பரம புருஷனுடைய பாதங்கள்மேல்,paadhangal mel - திருவடிகளின்மேலே அணி,ani - (நித்ய முக்தர்கள்) சாத்தின பைம் பொன்,paim pon - பசும்பொன்போல் விரும்பத்தக்க துழாய் என்றே ஓதும்,thuzhai endre odum - திருத்துழாயென்றே சொல்லுகின்றாள். ஆல்,aal - அந்தோ |