| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3022 | திருவாய்மொழி || (4-2–பாலனாய் ஏழுலகுண்டு) (காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்) (நப்பின்னைப் பிராட்டிக்காக எருதேழடர்த்த கண்ணபிரானுடைய திருவடிகளில் சாத்தின திருத்துழாய் விஷயமாகவே என் மகள் நைகின்றாளென்கிறாள்.) 5 | தோளி சேர் பின்னை பொருட்டு எருது ஏழ் தழீஇக் கோளியார், கோவலனார்,குடக் கூத்தனார் தாள் இணை மேல் அணி தண் அம் துழாய் என்றே நாளும் நாள் நைகின்றதால் என்றன் மாதரே.–4-2-5 | என் தன் மாதர்,en than maadhar - எனது பெண்பிள்ளை தோளி,tholi - அழகிய தோள்களையுடையவளும் சேர்,ser - அநுரூபையுமான பின்னை பொருட்டு,pinnai poruttu - நப்பின்னைப் பிராட்டிக்காக எழ் எருது,ezh erudhu - ஏழு எருதுகளையும் தழீ இக்கோளியார்,thazhee ikkoliyar - தழுவிக்கொண்டவரும் (அதாவது நிரஸித்தவரும்) கோவலனார்,kovalanar - கோபால க்ருஷ்ணனாய் அவதரித்தவரும் குடம் கூத்தனார்,kudam koothanar - குடக்கூத்தாடினவருமான கண்ணபிரானுடைய தாள் இணைமேல்,thaal inai mel - உபய பாதங்களின்மேலே அணி,ani - சாத்தின தண் அம் துழாய் என்றே,than am thuzhai endre - குளிர்ந்தழகிய திருத்துழாயென்றே சொல்லி நாளும் நாள்,naalum naal - நாள்தோறும் நைகின்றது,naikinrathu - சிதிலையாகின்றாள். |