Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3022 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3022திருவாய்மொழி || (4-2–பாலனாய் ஏழுலகுண்டு) (காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்) (நப்பின்னைப் பிராட்டிக்காக எருதேழடர்த்த கண்ணபிரானுடைய திருவடிகளில் சாத்தின திருத்துழாய் விஷயமாகவே என் மகள் நைகின்றாளென்கிறாள்.) 5
தோளி சேர் பின்னை பொருட்டு எருது ஏழ் தழீஇக்
கோளியார், கோவலனார்,குடக் கூத்தனார்
தாள் இணை மேல் அணி தண் அம் துழாய் என்றே
நாளும் நாள் நைகின்றதால் என்றன் மாதரே.–4-2-5
என் தன் மாதர்,en than maadhar - எனது பெண்பிள்ளை
தோளி,tholi - அழகிய தோள்களையுடையவளும்
சேர்,ser - அநுரூபையுமான
பின்னை பொருட்டு,pinnai poruttu - நப்பின்னைப் பிராட்டிக்காக
எழ் எருது,ezh erudhu - ஏழு எருதுகளையும்
தழீ இக்கோளியார்,thazhee ikkoliyar - தழுவிக்கொண்டவரும் (அதாவது நிரஸித்தவரும்)
கோவலனார்,kovalanar - கோபால க்ருஷ்ணனாய் அவதரித்தவரும்
குடம் கூத்தனார்,kudam koothanar - குடக்கூத்தாடினவருமான கண்ணபிரானுடைய
தாள் இணைமேல்,thaal inai mel - உபய பாதங்களின்மேலே
அணி,ani - சாத்தின
தண் அம் துழாய் என்றே,than am thuzhai endre - குளிர்ந்தழகிய திருத்துழாயென்றே சொல்லி
நாளும் நாள்,naalum naal - நாள்தோறும்
நைகின்றது,naikinrathu - சிதிலையாகின்றாள்.