| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3023 | திருவாய்மொழி || (4-2–பாலனாய் ஏழுலகுண்டு) (காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்) (ஸ்ரீ வராஹ மூர்த்தியாய் ப்ரளயார்ணவத்தில் பூமியை யெடுத்தருளின போது திருவடிகளிலணிந்திருந்த திருத்துழாயைப் பெறவேணுமென்று ஆசைப்படுகின்றாளென்மகளென்கிறாள்.) 6 | மாதர் மா மண் மடந்தை பொருட்டு ஏனமாய், ஆதி அம் காலத்து அகலிடம் கீண்டவர் பாதங்கள் மேல் அணி பைம்பொன் துழாய் என்றே ஓதுமால் எய்தினள் என்றன் மடந்தையே.–4-2-6 | மா மாதர்,maa maadhar - சிறந்த அழகுடைய மண் மடந்தை பொருட்டு,man madandhai poruttu - பூமிப் பிராட்டிக்காக ஆதி அம் காலத்து,aadhi am kaalathu - முன்னொரு காலத்தில் எனம் ஆய்,enam aai - வராஹ மூர்த்தியாய் அகல் இடம்,agal idam - விபுலமான பூமண்டலத்தை கீண்டவர்,keendavar - பிளந்தெடுத்துக் கொணர்ந்த பெருமானுடைய பாதங்கள்மேல்,paadhangal mel - திருவடிகளின்மீது அணி,ani - சாத்தின பைம் பொன் துழாய் என்றே,paim pon thuzhai endre - மிகவழகிய திருத்துழாயென்றே ஓதும் மால்,oodhum maal - ஓதும்படியான வியாமோஹத்தை என் தன் மடந்தை,en than madandhai - எனது பெண் பிள்ளை எய்தினள்,eythinaL - அடைந்தாள். |