Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3024 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3024திருவாய்மொழி || (4-2–பாலனாய் ஏழுலகுண்டு) (காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்) (அமுதமளிக்கக் கடல்கடைந்த காலத்துப் பெரிய பிராட்டியாரைத் திரு மார்பிலே வைத்தருளின எம்பெருமானுடைய திருவடிகளில் திருத்துழாயை என்மகள் ஆசைப்படுகின்றாளென்கிறாள்.) 7
மடந்தையை வண் கமலத் திரு மாதினைத்
தடங்கொள் தார் மார்பினில் வைத்தவர் தாளின் மேல்
வடங்கொள் பூந் தண் அம் துழாய் மலர்க்கே இவள்
மடங்குமால்; வாணுதலீர்! என் மடக்கொம்பே.–4-2-7
வாள் நுதலீர்,vaal nudhaleer - ஒளி பொருந்திய நெற்றியையுடைய பெண்காள்!
என் மட கொம்பு இவள்,en mada kombu ival - இளங்கொடி போன்ற எனது இப்பெண்பிள்ளை
மடந்தையை,madandhaiyai - இளமைப் பருவமுள்ள
வண் கமலம் திரு மாதினை,van kamalam thiru maadhinai - அழகிய தாமரைப்பூவிற் பிறந்த பிராட்டியை
தடம் கொள் தார் மார்பினில்,tadam kol thaar maarbinil - விசாலமானதும் மாலையணிந்ததுமான திரு மார்பிலே
வைத்தவர்,vaithavar - (பாற்கடல் கடைந்த காலத்து ஏற்றுக்கொண்ட பெருமானுடைய
தாளின் மேல்,thaalin mel - திருவடிகளின்மீது (சாத்தின)
வடம் கொள்,vadam kol - செறியத் தொடுக்கப்பட்டதும்
பூ,poo - அழகியதும்
தண்ணம்,thannam - குளிர்ச்சி பொருந்தியதுமான
துழாய் மலர்க்கே,thuzhai malarkke - திருத்துழாயின் பொருட்டே
மடங்கும்,madangum - சுருண்டு விழுகின்றாள்