| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3025 | திருவாய்மொழி || (4-2–பாலனாய் ஏழுலகுண்டு) (காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்) (ஸீதாபிராட்டிக்காக இலங்கை பாழாளாகப் படைபொருத பெருமானது திருவடிகளில் திருத்துழாயை என்மகள் விரும்பா நின்றாளென்கிறாள்.) 8 | கொம்பு போல் சீதை பொருட்டு, இலங்கை நகர் அம்பு எரி உய்த்தவர் தாள் இணை மேல் அணி வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள் நம்புமால்; நான் இதற்கு என் செய்கேன் நங்கைமீர்?–4-2-8 | நங்கைமீர்,nangaimir - பெண்காள்! கொம்பு போல் சீதை பொருட்டு,kombu pol seethai poruttu - பூங்கொடி போன்ற ஸீதாபிராட்டியின் பொருட்டு இலங்கை நகர்,ilangai nagar - இலங்காபுரியில் அம்பு ஏரி,ambu eri - அம்புகளில் நின்றும் கிளம்பும் அக்னியை உய்த்தவர்,uyithavar - செலுத்தின இராமபிரானுடைய தாள் இணைமேல்,thaal inaimel - உபயபாதங்களின் மீது அணி,ani - சாத்தின வம்பு அவிழ் தண் ஆம் துழாய் மலர்க்கே,vambu avizh thann am thuzhai malarkke - பரிமளப்ரசுரமாய்க் குளிர்ந்தழகிய திருத்துழாயின் மீதே இவள் நம்பும்,ival nambum - இவள் ஆசைப்படா நின்றாள்; இதற்கு நான் என் செய்வேன்,itharku naan en seyven - இதற்கு நான் என்ன பரிஹாரம் செய்வது. |