Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3025 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3025திருவாய்மொழி || (4-2–பாலனாய் ஏழுலகுண்டு) (காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்) (ஸீதாபிராட்டிக்காக இலங்கை பாழாளாகப் படைபொருத பெருமானது திருவடிகளில் திருத்துழாயை என்மகள் விரும்பா நின்றாளென்கிறாள்.) 8
கொம்பு போல் சீதை பொருட்டு, இலங்கை நகர்
அம்பு எரி உய்த்தவர் தாள் இணை மேல் அணி
வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள்
நம்புமால்; நான் இதற்கு என் செய்கேன் நங்கைமீர்?–4-2-8
நங்கைமீர்,nangaimir - பெண்காள்!
கொம்பு போல் சீதை பொருட்டு,kombu pol seethai poruttu - பூங்கொடி போன்ற ஸீதாபிராட்டியின் பொருட்டு
இலங்கை நகர்,ilangai nagar - இலங்காபுரியில்
அம்பு ஏரி,ambu eri - அம்புகளில் நின்றும் கிளம்பும் அக்னியை
உய்த்தவர்,uyithavar - செலுத்தின இராமபிரானுடைய
தாள் இணைமேல்,thaal inaimel - உபயபாதங்களின் மீது
அணி,ani - சாத்தின
வம்பு அவிழ் தண் ஆம் துழாய் மலர்க்கே,vambu avizh thann am thuzhai malarkke - பரிமளப்ரசுரமாய்க் குளிர்ந்தழகிய திருத்துழாயின் மீதே
இவள் நம்பும்,ival nambum - இவள் ஆசைப்படா நின்றாள்;
இதற்கு நான் என் செய்வேன்,itharku naan en seyven - இதற்கு நான் என்ன பரிஹாரம் செய்வது.