திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3026 | திருவாய்மொழி || (4-2–பாலனாய் ஏழுலகுண்டு) (காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்) (என் மகள் எம்பெருமானுடைய திவ்யாயுதங்களைச் சொல்லுவதற்காகத் தொடங்கி முற்றமுடியச் சொல்லமாட்டாதே இடையிடையே தளர்ந்து நோவுபடுகின்றாளென்கிறாள்.) 9 | நங்கைமீர்! நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர்;
எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை?
சங்கு என்னும்; சக்கரம் என்னும்; துழாய் என்னும்;
இங்ஙனே சொல்லும் இராப்பகல் என் செய்கேன்?–4-2-9 | பதவுரை Show / Hideநங்கைமீர்,nangaimir - மாதர்காள்! நீரும்,neerum - நீங்களும்; ஓர் பெண் பெற்று நல்கினீர்,or pen peruthu nalgineer - ஒவ்வொரு பெண்ணைப் பெற்று அன்போடு வளர்த்தருக்கின்றீர்கள்; யான் பெற்ற,yaan pera - நான் பெற்றிருக்கின்ற ஏழையை,ezhaiyai - இப்பேதையை எங்ஙனே சொல்லுவேன்,enggane solluven - எப்படியென்று சொல்லுவேன் (ஆகிலும் கொல்லுகிறேன்; சங்கு என்னும்,sanggu ennum - சங்கு என்கிறாள்; சக்கரம் என்னும்,chakkaram ennum - சக்கரமென்கிறாள்; துழாய் என்னும்,thuzhai ennum - திருத்துழாயென்கிறாள்; இராப்பகல்,irappagal - இரவும் பகலும் இங்ஙனே சொல்லும்,inggane sollum - இப்படியே சொல்லுகின்றாள்; என் செய்கேன்,en seyken - யாது செய்வேன்? |