Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3026 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3026திருவாய்மொழி || (4-2–பாலனாய் ஏழுலகுண்டு) (காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்) (என் மகள் எம்பெருமானுடைய திவ்யாயுதங்களைச் சொல்லுவதற்காகத் தொடங்கி முற்றமுடியச் சொல்லமாட்டாதே இடையிடையே தளர்ந்து நோவுபடுகின்றாளென்கிறாள்.) 9
நங்கைமீர்! நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர்;
எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை?
சங்கு என்னும்; சக்கரம் என்னும்; துழாய் என்னும்;
இங்ஙனே சொல்லும் இராப்பகல் என் செய்கேன்?–4-2-9
நங்கைமீர்,nangaimir - மாதர்காள்!
நீரும்,neerum - நீங்களும்;
ஓர் பெண் பெற்று நல்கினீர்,or pen peruthu nalgineer - ஒவ்வொரு பெண்ணைப் பெற்று அன்போடு வளர்த்தருக்கின்றீர்கள்;
யான் பெற்ற,yaan pera - நான் பெற்றிருக்கின்ற
ஏழையை,ezhaiyai - இப்பேதையை
எங்ஙனே சொல்லுவேன்,enggane solluven - எப்படியென்று சொல்லுவேன் (ஆகிலும் கொல்லுகிறேன்;
சங்கு என்னும்,sanggu ennum - சங்கு என்கிறாள்;
சக்கரம் என்னும்,chakkaram ennum - சக்கரமென்கிறாள்;
துழாய் என்னும்,thuzhai ennum - திருத்துழாயென்கிறாள்;
இராப்பகல்,irappagal - இரவும் பகலும்
இங்ஙனே சொல்லும்,inggane sollum - இப்படியே சொல்லுகின்றாள்;
என் செய்கேன்,en seyken - யாது செய்வேன்?