Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3027 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3027திருவாய்மொழி || (4-2–பாலனாய் ஏழுலகுண்டு) (காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்) (கீழ்ப்பாட்டில் ‘நங்கைமீர்!’ என்று விளிக்கப்பட்ட நங்கைகள் ப்ராங்குச நாயகியின் தாயை நோக்கி ‘அம்மா! உன்மகள் நீயிட்ட வழக்கன்றோ; அவளுக்கு ஹிதம் சொல்லாகாதோ?” என்ன, அவர்களுக்கு விடை கூறுகின்றாள்) 10
என் செய்கேன்? என்னுடைப் பேதை,என் கோமளம்,
என் சொல்லும் என் வசமும் அல்லள்; நங்கைமீர்!
மின்செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய்
பொன்செய் பூண் மென்முலைக்கு என்று மெலியுமே.–4-2-10
நங்கைமீர்,nangaimir - பெண்காள்!
என்னுடைபேதை என் கோமளம்,ennutaipeedhai en komalam - பேதைத்தனமும் ஸூகுமாரத் தன்மையும் பொருந்திய என்மகளானவள்
என் சொல்லும் என் வசமும் அல்லன்,en sollum en vasamum allan - என் சொல்லிலும் நிற்பதில்லை, என் வசத்திலும் நிற்பதில்லை;
மின் செய்,min sey - ஒளியைச் செய்கின்ற திருவாபரமணிந்த திருமார்பையுடையவனான
கண்ணன்,kannan - கண்ணபிரானுடைய
கழல்,kazhal - திருவடிகளைலுள்ள
துழாய்,thuzhai - திருத்துழாயை
பொன் செய்,pon sey - பசலை நிறம் பூத்ததும்
பூண்,poon - ஆபரணங்களிணிந்ததும்
மெல்,mel - பிரிவாற்றகில்லாததுமான
முலைக்கு என்று,mulaikku endru - முலையில் அணிந்துகொள்ள வேணுமென்று விரும்பி
மெலியும்,meliyum - (அது கிடையாமையாலே) உடம்பு இளைக்கப்பெறுகின்றாள்;
என் செய்கேன்,en seyken - இதற்கு யான் யாது செய்வேன்?