Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3030 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3030திருவாய்மொழி || (4-3–கோவை வாயாள்) (எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்) (தமது மனமொழி மெய்களாகிற முக்கரணங்களும் எம்பெருமானுக்குப் பரம யோக்யமாகின்றமையை வியந்து கூறுகின்றார். எம்பெருமானது திருமேனியின் வைலக்ஷண்யத்தையும், அவன்றனக்குத் தம்மிடத்து உண்டான விருப்பத்தையும் சிந்தனை செய்து, முன் சொன்னதையே மீண்டும் வாய்வெருவுகிறபடி.) 2
பூசும் சாந்து என் நெஞ்சமே; புனையும் கண்ணி எனதுடைய
வாசகம் செய் மாலையே; வான் பட்டாடையும் அஃதே;
தேசமான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே;
ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.–4-3-2
ஈசன்,eesan - ஸர்வேச்வரனாயும்
ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை,gnalam undu umizhndha endhai - (ஒரு காலத்தில்) உலகங்களையுண்டு (மற்றொரு காலத்திலே) வெளிப்படுத்தின ஸ்வாமியும்
ஏகமூர்த்திக்கு,ekamurththikku - ஒப்பற்ற திவ்யமங்கள் விக்ரஹத்தையுடையனாயுமிருக்கிற பெருமானுக்கு
பூசும் சாந்து,poosum saandhu - பூசுவதற்குரிய சந்தனம்
என் நெஞ்சமே,en nenjame - என் மனமேயாகும்;
புனையும் கண்ணி,punaiyum kanni - அணிந்து கொள்ளுதற்கு உரிய மாலை
எனதுடைய,enadudaiya - என்னுடைய
வாசகம் செய் மாலை,vaasagam sey maalai - வாக்கினால் தொடுக்கப்படுகிற் சொல்மாலையேயாம்;
வான் பட்டு ஆடையும்,vaan pattu aadaiyum - சிறந்த திருப்பரி வட்டமும்
அஃதே,akthe - அந்தர் சொல்மாலையேயாம்;
தேசம் ஆன,desam aana - தேஜஸ்கரமான
அணி கலனும்,ani kalanum - அணியப்படும் ஆபரணமும்
என் கை கூப்பு செய்கை ஏ,en kai koopu seygai ae - எனது அஞ்சலிபந்தமேயாம்;