Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3031 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3031திருவாய்மொழி || (4-3–கோவை வாயாள்) (எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்) (கீழ்த் திருவாய் மொழியில் தமக்குண்டான ஆற்றாமை தீரப் பெற்றமையை இங்கருளிச் செய்கிறார்.) 3
ஏக மூர்த்தி இருமூர்த்தி மூன்று மூர்த்தி பல மூர்த்தி
ஆகி ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி
நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே!உன்
ஆக முற்றும் அகத்து அடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே.–4-3-3
ஏகமூர்த்தி,ekamurththi - காரணபூதமான ஒரு மூர்த்தியாய்
இரு மூர்த்தி,iru murththi - (ஸ்ருஷ்டியின் தொடக்கத்திலே) ப்ரக்ருதி மஹான்களைச் சரீரமாகக்கொண்டு நிற்கும் மூர்த்தியாய்
மூன்று மூர்த்தி,moonru murththi - ஸாத்லிகமாயும் ராஜஸமாயும் தாமஸமாயும் மூன்று வகைப்பட்ட அஹங்காரத்தை வடிவமாகக் கொண்ட மூர்த்தியாய்
பல மூர்த்தி ஆகி,pala murththi aagi - மநஸ் முதலிய கரணங்களை வடிவாகவுடையனாய்
ஐந்து பூதம் ஆய்,aindhu bootham aay - பஞ்ச பூதங்களை வடிவாகவுடையனாய்
இருண்டு சுடர் ஆய்,irundu sudar aay - ஸூர்ய சந்திரர்களிருவரையும் வடிவாகவுடையனாய்
அரு ஆகி,aru aagi - ஸர்வாந்தர்யாமியாய்
நடு கடலுள்,nadu kadalul - திருப்பாற் கடல் நடுவே
நாகம் ஏறி,naagam aeri - திருவனந்தாழ்வான் மீது ஏறி
துயின்ற,thuyindra - திருக்கண்வளர்ந்தருளின
நாராயணனே,naarayananey - நாராயணனே!
உன்,un - உன்னுடைய
ஆகம்,aagam - திருமேனியையும்
முற்றம்,mutram - அதற்கு வேண்டிண மற்றெல்லாவற்றையும்
அகத்து,agathu - எனது நெஞ்சினுள்ளே
அடக்கி,adakki - அடங்கவைத்து
ஆவி,aavi - உன் திருவுள்ளம்
அல்லல் மாய்த்ததே,allal maayththadhey - இடர் நீங்கப்பெற்றதே!