Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3032 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3032திருவாய்மொழி || (4-3–கோவை வாயாள்) (எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்) (பூதனையை முடித்தல் முதலான ஸமயங்களில் விடாய்தீர வந்துநின்று சிசிரோபசாரம் பண்ணப் பெற்றிலேனே யாகிலும் உன் திருமேனிக்கு என்னுயிரே உபகாரமாய்விட்டதே யென்கிறார்) 4
மாய்த்தல் எண்ணி ‘வாய் முலை தந்த மாயப் பேய் உயிர்
மாய்த்த ஆய மாயனே! வாமனனே! மாதவா!
பூத்தண் மாலை கொண்டு உன்னைப் போதால் வணங்கேனேலும்,நின்
பூத்தண் மாலை நெடு முடிக்குப் புனையும் கண்ணி எனதுயிரே.–4-3-4
மாய்த்தல் எண்ணி,maayththal enni - முடிப்பதாக நினைத்து
வாய்,vaai - வாயிலே
முலை தந்த,mulai thantha - நஞ்சு தீற்றிய முலையை வைத்த
மாயம் பேய்,maayam pey - பூதனையினுடைய
உயிர்,uyir - பிராணனை
மாய்த்த,maayththa - முடித்துவிட்ட
ஆய! மாயனே!,aaya! maayaney! - வாமனனே! மாதவா!
உன்னை,unnai - உன்னை
பூ தண் மாலை கொண்டு,poo than maalai kondu - பூக்கள் தொடுத்துக் குளிர்ந்த மாலைகளைக் கொண்டு
போது,podhu - அவ்வப்போதுகளில்
வணங்கேன் ஏலும்,vanangen elum - வழிபாடு செய்யப்பெற்றிலேனாகிலும்
நின்,nin - உன்னுடைய
பூ தண் மாலை நெடு முடிக்கு,poo than maalai nedu mudikku - புஷ்பமயமாய்ச் செவ்விய மாலையாலே அலங்கரிக்கப்பட்ட நீண்ட திருமுடிக்கு
புனையும் கண்ணி,punaiyum kanni - அலங்காரமாய்ச் சாத்துகின்ற மாலை
எனது உயிரே,enathu uyire - என் பிராணனாவதே!