| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3033 | திருவாய்மொழி || (4-3–கோவை வாயாள்) (எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்) (தம்முடைய உயிரையும் காதலையும் எம்பெருமான் போரப் பொலிய அபிமானித்த படியைப் பேசுகிறார்.) 5 | கண்ணி எனது உயிர் காதல் கனகச் சோதி முடி முதலா எண்ணில் பல் கலன்களும்; ஏலும் ஆடை யும் அஃதே; நண்ணி மூவுலகும் நவிற்றும் கீர்த்தியும் அஃதே; கண்ணன் எம்பிரான் எம்மான் கால சக்கரத் தானுக்கே.–4-3-5 | காலம் சக்கரத்தான்,kaalam sakkaraththaan - காலத்தை நடத்துகிற திரு வாழியையுடையனாய் எம்மான்,emmaan - எனக்கு ஸ்வாமியாய் எம் பிரான்,em piraan - எனக்கு மஹோபநாரகனான கண்ணனுக்கு,kannanukku - ஸ்ரீ க்ருஷ்ணபகவானுக்கு எனது உயிர்,enathu uyir - என் ஆத்மவஸ்து கண்ணி,kanni - மாலை போல் போக்யமாகா நின்றது; காதல்,kaadhal - எனது ஆசையானது கனகம் சோதி முடி முதல் ஆ,kanakam sothi mudi muthal aa - பொன்மயமாய் ஒளியையுடைத்தான திருவபிஷேகம் முதலாக எண் இல் பல் கலன்களும்,en il pal kalan'galum - கணக்கற்ற பல திருவாபரணங்களாக ஆகா நின்றது; எலும் ஆடையும்,elum aadayum - ஏற்றதான பீதாம்பரமும் அஃதே,akthe - அந்தக் காதலேயாம்; மூ உலகும்,moo ulakum - மூவுலகங்களும் நண்ணி,nanni - கிட்டி நவிற்றும்,navitrum - துதிக்கின்ற கீர்த்தியும்,keerththiyum - புகழும் அஃதே,akthe - அந்தக காதலேயாம். |