| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3034 | திருவாய்மொழி || (4-3–கோவை வாயாள்) (எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்) (கீழ்ப்பாசுரங்களில் எம்பெருமானுடைய ப்ரணயித்வம்; சொல்லிற்று; இப்பாசுரத்தில் தம்முடைய ப்ரணயித்வம் சொல்லுகிறது.) 6 | கால சக்கரத்தொடு வெண் சங்கம் கை ஏந்தினாய்! ஞால முற்றும் உண்டு உமிழ்ந்த நாராயணனே!’ என்று என்று, ஓல மிட்டு நான் அழைத்தால் ஒன்றும் வாராயாகிலும், கோலமாம் என் சென்னிக்கு உன் கமல மன்ன குரை கழலே.–4-3-6 | காலன் சக்கரத்தொடு,kaalan sakkaraththodu - (பகைவரையழிப்பதில்) யமன் போன்ற திருவாழியோடுகூட வெண் சங்கு,ven changu - வெளுத்த சங்கத்தை அம் கை,am kai - அழகிய திருக்கையிலே ஏந்தினாய்,yenthinaai - தரித்திருப்பவனே! ஞாலம் முற்றும்,gnaalam mutrum - உலகமுழுவதையும் உண்டு உமிழ்ந்த,undu umizhntha - ஒருகால் விழுங்கி மற்றொரு கால் வெளிப்படுத்தின நாராயணனே,narayananey - நாராயணா! என்று என்று,endru endru - பலகால் சொல்லி ஓலம் இட்டு,olam ittu - கூப்பிட்டு நான் அழைத்தால்,naan azhaithaal - நான் அழைக்க ஒன்றும் வாராய் ஆகிலும்,onrum vaaraai aagilum - நீ சிறிதும் வந்தருளாமற் போனாலும் உன்,un - உன்னுடைய கமலம் அன்ன,kamalam anna - தாமரை மலர்போன்ற குரை கழல்,kurai kazhal - ஒலிக்கின்ற வீரக்கழலையணிந்த திருவடிகள் என் சென்னிக்கு,en sennikku - எனது தலைக்கு கோலும் ஆம்,kolum aam - அலங்காரமாகநின்றது. |